பதிவு செய்த நாள்
21 ஜூலை2014
00:09
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு துறை, 6 சதவீதம் வளர்ச்சி காணும் என, இந்திய மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (அக்மா) தலைவர் ஹரிஷ் லஷ்மன் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:மூலப் பொருட்கள் விலை உயர்வு, அதிக வட்டி விகிதம் உள்ளிட்ட காரணங்களால், கடந்த நிதியாண்டில், மோட்டார் வாகன துறை வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது.இதையடுத்து, அந்நிதியாண்டில், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் துறையின் விற்று முதல், 2,117 கோடி ரூபாயாக சரிவடைந்தது.
இது,இதற்கு முந்தைய நிதியாண்டின் விற்று முதலை(2,160 கோடி ரூபாய்) காட்டிலும், 2 சதவீதம் குறைவாகும். தற்போது பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருவதை யடுத்து, கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை சூடுபிடித்துள்ளது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், வாகன உதிரிபாகங்கள் துறை, 4–6 சதவீதம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த நிதியாண்டில்,வாகன உதிரி பாகங்கள் ஏற்றுமதி,16.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 61,487 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது,இதற்கு முந்தைய 2012– 13ம் நிதியாண்டில், 52,690 கோடி ரூபாயாக இருந்தது.மதிப்பீட்டு நிதியாண்டில் இவற்றின் இறக்குமதி, 3.6 சதவீதம் அதிகரித்து, 74,463 கோடியிலிருந்து, 77,160 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|