பதிவு செய்த நாள்
25 ஜூலை2014
10:43
மும்பை : கடந்த எட்டு நாட்களாக ஏற்றம் கண்டு இருந்த இந்திய பங்குசந்தைகள், வர்த்தக வாரத்தின் கடைசிநாளான இன்று(ஜூலை 25ம் தேதி) சரிவுடன் துவங்கின. ஆசிய பங்குசந்தைகளில் ஏற்றம் காணப்பட்டாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை அதிகளவு விற்க தொடங்கியதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 25.15 புள்ளிகள் சரிந்து 26,246.70-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 10.25 புள்ளிகள் சரிந்து 7,820.35-ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து சரிந்த பங்குசந்தைகள் காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 101.50 புள்ளிகள் சரிந்து 26,170.35-ஆகவும், நிப்டி 33.70 புள்ளிகள் சரிந்து 7,796.90-ஆகவும் இருந்தன. முன்னதாக நேற்று சென்செக்ஸ் 26,300.17 புள்ளிகளையும், நிப்டி 7,840.95 புள்ளிகளையும் தொட்டு புதிய உச்சத்தை தொட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|