பதிவு செய்த நாள்
30 ஜூலை2014
23:36
புதுடில்லி: நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை 15ம் தேதி வரையிலான காலத்தில், முன்பேர சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 62 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 17.25 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 45.53 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.மதிப்பீட்டு காலத்தில், தங்கம், வெள்ளி, எரிசக்தி, உலோகம், வேளாண் பொருட்கள் ஆகியவற்றின் மீதான, முன்பேர வர்த்தகம் மிகவும் சரிவடைந்து உள்ளது.குறிப்பாக, தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மீதான முன்பேர வர்த்தகம், மதிப்பீட்டு காலத்தில், 70 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 20.95 லட்சம் கோடியிலிருந்து, 6.18 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே போன்று, உலோகங்கள் மீதான வர்த்தகமும், 68 சதவீதம் சரிவடைந்து, 11.65 லட்சம் கோடியிலிருந்து, 3.69 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. கணக்கீட்டு காலத்தில், வேளாண் பொருட்கள் மீதான வர்த்தகம், 14 சதவீதம் குறைந்து, 4.22 லட்சம் கோடியிலிருந்து, 3.64 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது என, எப்.எம்.சி., தெரிவித்துள்ளது.
பொருட்கள் பரிவர்த்தனை வரி விதிக்கப்பட்டதிலிருந்து, முன்பேர சந்தைகளின் விற்றுமுதல் சரிவடைந்து வருகிறது.தேசிய அளவில், ஐந்து முன்பேர சந்தைகளும், மண்டல அளவில், ஆறு முன்பேர சந்தைகளும் செயல்பட்டு வருகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|