பதிவு செய்த நாள்
05 ஆக2014
06:26
புதுடில்லி :மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், 2014 – 19ம் ஆண்டிற்கான, புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை (எப்.டி.பி.,), இம்மாதம் இறுதியில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஐந்தாண்டு திட்ட காலத்திற்கான, (2014 – 19), புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கைக்கு, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம், இறுதி வடிவம் கொடுத்து வருகிறது. இதையடுத்து, புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை, இம்மாத இறுதியில் வெளியாகும்’ என்று தெரிவித்தார்.ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும், வெளிநாட்டு வர்த்தக கொள்கையை சார்ந்தே உள்ளது.
உள்நாட்டில், பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரித்து, வர்த்தகத்தை விரிவுபடுத்தி, ஏற்றுமதியை ஊக்குவிப்பதை எப்.டி.பி., முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவை துறையின் பங்களிப்பு, 55 சதவீதமாக உள்ளது.எனவே, அறிவிக்கப்பட உள்ள புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையில், இத்துறை சார்ந்த ஏற்றுமதி திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டு கொண்டுஉள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), நாட்டின் ஏற்றுமதி, 9.31 சதவீதம் அதிகரித்து, 8,011 கோடி டாலராக உயர்ந்துள்ளது.குறிப்பாக, சென்ற மே மாதத்தில், சேவைத்துறையின் ஏற்றுமதி பங்களிப்பு மட்டும் 1,400 கோடி டாலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|