பதிவு செய்த நாள்
05 ஆக2014
06:29
மும்பை: கடந்த இரண்டு வர்த்தக தின சரிவிற்கு பின், நேற்று, பங்கு வியாபாரம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.ரிசர்வ் வங்கி, இன்று வெளியிட உள்ள அதன் நிதி ஆய்வு கொள்கையை எதிர்பார்த்து, சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர். இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி,’ முறையே, 0.95 சதவீதம் மற்றும் 1.07 சதவீதம் உயர்ந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், சிறிய ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், மருந்து துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும், தேவை குறைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 242.32 புள்ளிகள் அதிகரித்து, 25,723.16 புள்ளிகளில் நிலைக்கொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், இன்போசிஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட, 25 நிறுவனப் பங்கு களின் விலை அதிகரித்தும், சன்பார்மா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட, 5 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 81.05 புள்ளிகள் உயர்ந்து, 7,683.65 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|