கோல் இந்தியா நிறுவனம்உற்பத்தி இலக்கை எட்டவில்லைகோல் இந்தியா நிறுவனம்உற்பத்தி இலக்கை எட்டவில்லை ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.84 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.84 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘சென்செக்ஸ்’ 242 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2014
06:29

மும்பை: கடந்த இரண்டு வர்த்தக தின சரிவிற்கு பின், நேற்று, பங்கு வியாபாரம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.ரிசர்வ் வங்கி, இன்று வெளியிட உள்ள அதன் நிதி ஆய்வு கொள்கையை எதிர்பார்த்து, சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர். இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி,’ முறையே, 0.95 சதவீதம் மற்றும் 1.07 சதவீதம் உயர்ந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், சிறிய ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், மருந்து துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும், தேவை குறைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 242.32 புள்ளிகள் அதிகரித்து, 25,723.16 புள்ளிகளில் நிலைக்கொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், இன்போசிஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட, 25 நிறுவனப் பங்கு களின் விலை அதிகரித்தும், சன்பார்மா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட, 5 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 81.05 புள்ளிகள் உயர்ந்து, 7,683.65 புள்ளிகளில் நிலைபெற்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)