நடப்பு நிதியாண்டில் ரூ.334.5 கோடி நிகர லாபம்: என்.எல்.சி., சாதனைநடப்பு நிதியாண்டில் ரூ.334.5 கோடி நிகர லாபம்: என்.எல்.சி., சாதனை ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.224 உயர்வு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.224 உயர்வு ...
சர்க்கரை ஏற்றுமதி மானியம் டன்னுக்கு ரூ.3,371ஆக உயர்த்த திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2014
05:06

புதுடில்லி,: நடப்பு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்திற்கான, மூல சர்க்கரை மீதான ஏற்றுமதி மானியத்தை டன்னுக்கு, 3,371 ரூபாயாக உயர்த்த, மத்திய உணவு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.இது, இதற்கு முந்தைய இரண்டு மாதங்களில் (ஜூன்-ஜூலை), 3,300 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சர்க்கரை ஆலைகளுக்கு உதவிடும் வகையிலும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்கிட ஏதுவாகவும், சென்ற 2013 - 14ம் மற்றும் 2014 - 15ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,-செப்.,), 40 லட்சம் டன் வரை ஏற்றுமதி செய்யப்படும் மூல சர்க்கரைக்கான, மானிய அறிவிப்பை, சென்ற பிப்ரவரியில், முந்தைய ஐ.மு., கூட்டணி அரசு வெளியிட்டது.
இதன்படி, இரு மாதங்களுக்கு ஒருமுறை, மானியம் குறித்து முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.கடந்த பிப் - மார்ச்சில், மூல சர்க்கரை ஏற்றுமதி மீதான மானியம், 3,300 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, பின் ஏப்ரல் - மே மாதத்தில், 2,277 ரூபாயாக குறைக்கப்பட்டது.ராம்விலாஸ் பஸ்வான் புதிய உணவு அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட பின், சென்ற ஜூன் - ஜூலை மாதத்தில், ஒரு டன் மூல சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம், மீண்டும், 3,300 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இதனை, தற்போது, 3,371 ரூபாயாக அதிகரிக்க, உணவு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தின், ஜூலை 31ம் தேதி வரையிலான காலத்தில், சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு, 47,852 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இருப்பினும், 9,252 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)