பதிவு செய்த நாள்
09 ஆக2014
05:06
புதுடில்லி,: நடப்பு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்திற்கான, மூல சர்க்கரை மீதான ஏற்றுமதி மானியத்தை டன்னுக்கு, 3,371 ரூபாயாக உயர்த்த, மத்திய உணவு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.இது, இதற்கு முந்தைய இரண்டு மாதங்களில் (ஜூன்-ஜூலை), 3,300 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சர்க்கரை ஆலைகளுக்கு உதவிடும் வகையிலும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்கிட ஏதுவாகவும், சென்ற 2013 - 14ம் மற்றும் 2014 - 15ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,-செப்.,), 40 லட்சம் டன் வரை ஏற்றுமதி செய்யப்படும் மூல சர்க்கரைக்கான, மானிய அறிவிப்பை, சென்ற பிப்ரவரியில், முந்தைய ஐ.மு., கூட்டணி அரசு வெளியிட்டது.
இதன்படி, இரு மாதங்களுக்கு ஒருமுறை, மானியம் குறித்து முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.கடந்த பிப் - மார்ச்சில், மூல சர்க்கரை ஏற்றுமதி மீதான மானியம், 3,300 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, பின் ஏப்ரல் - மே மாதத்தில், 2,277 ரூபாயாக குறைக்கப்பட்டது.ராம்விலாஸ் பஸ்வான் புதிய உணவு அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட பின், சென்ற ஜூன் - ஜூலை மாதத்தில், ஒரு டன் மூல சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம், மீண்டும், 3,300 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இதனை, தற்போது, 3,371 ரூபாயாக அதிகரிக்க, உணவு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தின், ஜூலை 31ம் தேதி வரையிலான காலத்தில், சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு, 47,852 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இருப்பினும், 9,252 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|