பதிவு செய்த நாள்
10 ஆக2014
08:36
புதுடில்லி :பாலியல் தொந்தரவுகள், மிரட்டல்கள் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்காக எஸ்.ஓ.எஸ்., என்ற புதிய மொபைல் போன் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் சமயத்தில் மொபைலில் உள்ள இந்த அப்ளிகேஷன் பட்டனை அழுத்தினால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், தங்கள் குடும்பத்திற்குள் தகவல் அளிக்க முடியும். இதனை வைத்து குற்றம் நடைபெறும் இடத்தை உடனடியாக கண்டறிய முடியும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்காக இந்த அப்ளிகேஷனை வடிவமைத்ததாக கான்பூரைச் சேர்ந்த இமானுயல் தெரிவித்துள்ளார். போலீஸ் கட்டுப்பாட்டு அறை மட்டுமின்றி மேலும் 4 பேர்களின் நம்பர்களை இந்த அப்ளிகேஷனில் இணைத்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள சிறப்பு குழு ஒன்றால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மொபைல் அப்ளிகேஷன் அடுத்த 15 நாட்களில் செயல்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது.மேலும் கூகுள் அப்ளிகேஷன் மூலம் எந்தவொரு ஆன்டிராய்டு போனிலும் இந்த எஸ்.ஓ.எஸ்., அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|