வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவிலிருந்து பங்குசந்தைகள் மீண்டன!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 ஆக2014
10:29

மும்பை : கடந்தவாரம் சரிவில் இருந்த இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் துவக்கநாளான இன்று(ஆகஸ்ட் 11ம் தேதி) ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 221.20 புள்ளிகள் உயர்ந்து 25,550.34-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 7,633.55-ஆகவும் இருந்தன. ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு டிரஸ்ட்டில் புதிய விதிகள் கொண்டு வர செபி ஒப்புதல் அளித்துள்ளதன் எதிரொலியாக பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன. இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 1.16 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 2.23 சதவீதமும் உயர்வுடன் இருந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

வர்த்தக துளிகள் ஆகஸ்ட் 11,2014
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் ஆகஸ்ட் 11,2014
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு ஆகஸ்ட் 11,2014
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் ஆகஸ்ட் 11,2014
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!