பதிவு செய்த நாள்
26 ஆக2014
16:58
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்றும் ஏற்ற - இறக்கமாகவே முடிந்தது. நிலக்கரி சுரங்கத்தில் பெரிய முறைகேடு நடந்திருப்பதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து பங்குசந்தைகளில் நேற்று முதல் சுணக்கமான நிலையே நிலவுகிறது. நேற்று சென்செக்ஸ் உயர்ந்தும், நிப்டி சரிந்தும் முடிந்த நிலையில் இன்றும் அதேநிலை தொடர்கிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சரிவுடன் துவங்கின பங்குசந்தைகள். பிறகு மருத்துவம், எப்எம்சிஜி., தொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்க தொடங்கியதால் பங்குசந்தைகள் உயர்ந்தன. இதனால் சென்செக்ஸ் ஏற்றம் கண்டன. அதேசமயம் நிப்டி சிறு சரிவில் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 5.79 புள்ளிகள் உயர்ந்து 26,442.81-ஆகவும், நிப்டி 1.55 புள்ளிகள் சரிந்து 7,904.75-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ., ஐசிஐசிஐ., எச்டிஎப்சி., போன்ற பங்குகள் சரிந்தும், சன்பார்மா, டாக்டர் ரெட்டி சிப்லா, ஐடிசி போன்ற பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|