மாதம் ஒரு சிலிண்டர் கட்டுப்பாடு நீக்கம்மாதம் ஒரு சிலிண்டர் கட்டுப்பாடு நீக்கம் ... தங்கம் விலை ரூ.88 உயர்வு தங்கம் விலை ரூ.88 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சொகுசு கார்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் கணக்கிடுவது எப்படி.?!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2014
10:56

வாடிக்கையாளரை கவரும் வகையில், நிதி நிறுவனங்கள், கார் தயாரிப்பு நிறுவனங்கள், சொகுசு கார் வாங்க, எளிய கடன் வசதி; தள்ளுபடி விலை போன்ற சலுகைகளை வாரி வழங்குகின்றன. இதனால், ஏராளமானோர், தாங்கள் விரும்பிய சொகுசு கார்களை, அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். சொகுசு கார்களில், சிறிய பழுது ஏற்பட்டால் கூட, அதற்காக உள்ள பிரத்யேக பழுது பார்க்கும் மையங்களில் மட்டும் தான், பழுது சரி செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது. எனவே, சொகுசு கார்களை பராமரிக்க, இன்சூரன்ஸ் செய்வது அவசியமாகி வருகிறது. காரில் பழுது ஏற்பட்டால், அதன் செலவை, இன்சூரன்ஸ் மூலம், சுலபமாக எதிர் கொள்ள முடியும். மேலும், கார் விபத்தில் சிக்குண்டால், பயணம் செய்தவர்களுக்கும், எதிரே வந்தவர்களுக்கும், இழப்பீடு கோர முடியும்.
இதுகுறித்து, டாடா ஏ.ஐ.ஜி., பொது காப்பீட்டு வாடிக்கையாளர் துணை தலைவர், ரமேஷ் ரமணி கூறியதாவது: சொகுசு கார், உதிரி பாகங்கள் விலை அதிகமாக இருப்பதால், அவை தேய்மானம் ஏற்படும் போது, அதிக செலவிட வேண்டியுள்ளது. எனவே, அதை சமாளிக்க, இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். மழை, வெள்ளத்தின் போது, சொகுசு கார் இன்ஜின் பழுது ஏற்பட்டு, அதை சரி செய்ய அல்லது மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், காரின் மொத்த விலையில், 30 – 40 சதவீத தொகை செலவழிக்க வேண்டும். இன்சூரன்ஸ் செய்வதன் மூலம், இந்த செலவு மிச்சம். இவ்வாறு, அவர் கூறினார்.
தற்போது, காப்பீட்டு நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால், அவை வாடிக்கையாளரை கவரும் வகையில், பல சலுகைகள் வழங்கி வருகின்றன. இதனால், ஆண்டு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையும் நிறுவனத்திற்கு, நிறுவனம் மாறுபடுகிறது. அதன்படி,
* 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, சொகுசு கார்களுக்கு, ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் முதல் 1.30 லட்சம் ரூபாய் வரை, இன்சூரன்ஸ் பிரீமியம் வசூலிக்கப்படுகிறது.
* 50 லட்சம் ரூபாய் காருக்கு, 90 ஆயிரம் ரூபாய் – 2.20 லட்சம் ரூபாய்; 1 கோடி ரூபாய் கார், 1.75 லட்சம் ரூபாய் – 4.30 லட்சம் ரூபாய் என, பிரீமியம் வசூலிக்கப்படுகிறது.
* வாடகை சொகுசு கார்களுக்கு, மேற்கண்ட பிரீமியம் தொகையுடன், கூடுதலாக, 20 ஆயிரம் – 30 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.
* ஆண்டுதோறும், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தி, விபத்து ஏற்படாமல், இழப்பீடு கோரவில்லை என்றால், அடுத்த பிரீமியம் தொகையில், சலுகை வழங்கப்படுகிறது.
* வெளிநாடுகளில், காரின் மொத்த தொகையில், 10 சதவீதம் இன்சூரன்ஸ் பிரீமியமாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில், 2 – 3 சதவீதம் மட்டுமே பிரீமியம் வசூலிக்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)