தங்கம் உயர்ந்தது - வெள்ளி குறைந்ததுதங்கம் உயர்ந்தது - வெள்ளி குறைந்தது ... டீமேட் கணக்குகள் 2.22 கோடியாக அதிகரிப்பு டீமேட் கணக்குகள் 2.22 கோடியாக அதிகரிப்பு ...
நாடு வளர்ச்சி பாதைக்கு திரும்புகிறது - அருன்ஜெட்லி அறிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2014
16:32

புதுடில்லி: மத்தியில் புதிய அரசு அமைந்து 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தனது அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை (ரிப்போர்ட் கார்டு) மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ளார். அறிக்கையை வெளியிட்டு ஜெட்லி பேசுகையில், மத்திய அரசு பொறுப்பேற்ற போது, நாடு பல்வேறு சவால்களை சந்தித்துக் கொண்டிருந்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், வளர்ச்சியை அதிகரிப்பது, முதலீட்டை அதிகரிப்பது ஆகியவையே மத்திய அரசின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. நாட்டில் வரி பிரச்னைகளுக்கு தீர்வு காண சிறப்பு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிக்கும் நடைமுறை முக்கிய கட்டத்தில் உள்ளது. இன்சூரன்ஸ் மசோதா பார்லிமென்ட்டின் அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். மத்திய அரசு எடுத்துள்ள நீண்ட கால நோக்கிலான முடிவுகளின் பலன்கள் மெதுவாக தெரிய வரும். முதல் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி வகிதம் 5.7 சதவீதமாக இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் இந்த வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் நாடு வளர்ச்சிக்கு பாதைக்கு திரும்புகிறது என்பதை இது காட்டுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு லோக்சபா தேர்தல் முடிவுகளும் முக்கிய காரணம். இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)