பதிவு செய்த நாள்
01 செப்2014
00:50
புதுடில்லி;தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பிற்கான, இந்தியாவின் ஏற்றுமதி, அடுத்த 10 ஆண்டுகளில், 16.80 லட்சம் கோடி ரூபாயை ( 28 ஆயிரம் கோடி டாலர்) எட்டும் என, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியான் நாடுகள் கூட்டமைப்பில், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட, 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன.இந்தியா – ஆசியான் இடையிலான வர்த்தகம், தற்போது, 8,000 கோடி டாலராக உள்ளது. இது, கடந்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக, 23 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.
சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், ஆசியான் நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, 3,313 கோடி டாலராக உள்ளது. நரேந்திர மோடி தலைமையில் அமைந்துள்ள, புதிய அரசு, ‘ஆசியான்’ நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை பலப்படுத்துவதில் முனைப்புடன் உள்ளன.விரைவில், சேவைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக, இந்தியா – ஆசியான் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் பயனாக, அடுத்த, 10 ஆண்டுகளில், ‘ஆசியான்’ நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, 16.80 லட்சம் கோடி ரூபாயை (28 ஆயிரம் கோடி டாலர்) எட்டும். மேலும், அந்நாடுகளுக்கான ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு, 15 சதவீதமாக இருக்கும் என, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|