பதிவு செய்த நாள்
01 செப்2014
15:32
வெளி மாநிலங்களில் இருந்து, மீன் வரத்து அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் மீன் விலை வெகுவாக குறைந்துள்ளது. பல மாதங்களுக்கு பின், விலை குறைந்துள்ளதால், அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நான்கு மாதங்கள்:தமிழகத்தில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து, நான்கு மாதங்கள் ஆகியும், மீன் விலை எதிர்பார்த்த அளவில் குறையவில்லை. கடந்த மாதம், ஒரு கிலோ வஞ்சிரம் முதல் ரகம் - 750 ரூபாய், இரண்டாம் ரகம் - 500 ரூபாய்; இறால் முதல் ரகம் - 1,300 ரூபாய், இரண்டாம் ரகம் - 600 ரூபாய்; வவ்வால் - 400 ரூபாய்; சங்கரா, பாறை, நெத்திலி - 200 ரூபாய்; நண்டு- 150 ரூபாய், துக்கடா மீன்களான மத்தி, தும்பிலி - 75 ரூபாய் வரை விற்பனையானது.
இந்நிலையில், இரண்டு வாரங்களாக, மீன் விலை வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது, விலை மேலும் குறைந்துள்ளது.சென்னையில் நேற்று, வஞ்சிரம் முதல் ரகம் - 570 ரூபாய், இரண்டாம் ரகம் - 400 ரூபாய்; இறால் முதல் ரகம் - 1,100 ரூபாய், இரண்டாம் ரகம் - 400 ரூபாய், சங்கரா, பாறை, நெத்திலி - 130 ரூபாய்; நண்டு - 70 ரூபாய்; தும்பிலி, மத்தி, சூரை வகைகள்- 50, 30, 20 ரூபாய் வரை விலை குறைந்து விட்டன. இதுதவிர, வேறு பல மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துஉள்ளது.
பல மாதங்களுக்கு பின், மீன் விலை வெகுவாக குறைந்துள்ளது, அசைவ பிரியர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.இதுகுறித்து, சென்னையை சேர்ந்த கடல் உணவுப்பொருள் ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:விலை குறைவுக்கு, விநாயகர் சதுர்த்தி ஒரு காரணம் அல்ல. கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து, ஏராளமான மீன்கள் தமிழகம் வரத் துவங்கி உள்ளது; விலையும் குறைவாக கிடைக்கிறது.அதிகரிக்காது
தமிழகத்திலும், உள்ளூர் மீன் வரத்து அதிகமாகவே உள்ளது. இதனால், மீன் விலை வழக்கத்தை விட குறைந்துள்ளது. ஏற்றுமதி மீன் விலையும் குறைந்துள்ளது. மீன் விலை இப்போதைக்கு அதிகரிக்க வாய்ப்பில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|