தங்கம் விலை ரூ.56 குறைந்ததுதங்கம் விலை ரூ.56 குறைந்தது ... நகரங்களில் 'வை - பி'மத்திய அரசு தீவிரம் நகரங்களில் 'வை - பி'மத்திய அரசு தீவிரம் ...
வரத்து அதிகரிப்பால் மீன் விலை சரிவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2014
15:32

வெளி மாநிலங்களில் இருந்து, மீன் வரத்து அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் மீன் விலை வெகுவாக குறைந்துள்ளது. பல மாதங்களுக்கு பின், விலை குறைந்துள்ளதால், அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நான்கு மாதங்கள்:தமிழகத்தில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து, நான்கு மாதங்கள் ஆகியும், மீன் விலை எதிர்பார்த்த அளவில் குறையவில்லை. கடந்த மாதம், ஒரு கிலோ வஞ்சிரம் முதல் ரகம் - 750 ரூபாய், இரண்டாம் ரகம் - 500 ரூபாய்; இறால் முதல் ரகம் - 1,300 ரூபாய், இரண்டாம் ரகம் - 600 ரூபாய்; வவ்வால் - 400 ரூபாய்; சங்கரா, பாறை, நெத்திலி - 200 ரூபாய்; நண்டு- 150 ரூபாய், துக்கடா மீன்களான மத்தி, தும்பிலி - 75 ரூபாய் வரை விற்பனையானது.
இந்நிலையில், இரண்டு வாரங்களாக, மீன் விலை வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது, விலை மேலும் குறைந்துள்ளது.சென்னையில் நேற்று, வஞ்சிரம் முதல் ரகம் - 570 ரூபாய், இரண்டாம் ரகம் - 400 ரூபாய்; இறால் முதல் ரகம் - 1,100 ரூபாய், இரண்டாம் ரகம் - 400 ரூபாய், சங்கரா, பாறை, நெத்திலி - 130 ரூபாய்; நண்டு - 70 ரூபாய்; தும்பிலி, மத்தி, சூரை வகைகள்- 50, 30, 20 ரூபாய் வரை விலை குறைந்து விட்டன. இதுதவிர, வேறு பல மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துஉள்ளது.
பல மாதங்களுக்கு பின், மீன் விலை வெகுவாக குறைந்துள்ளது, அசைவ பிரியர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.இதுகுறித்து, சென்னையை சேர்ந்த கடல் உணவுப்பொருள் ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:விலை குறைவுக்கு, விநாயகர் சதுர்த்தி ஒரு காரணம் அல்ல. கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து, ஏராளமான மீன்கள் தமிழகம் வரத் துவங்கி உள்ளது; விலையும் குறைவாக கிடைக்கிறது.அதிகரிக்காது
தமிழகத்திலும், உள்ளூர் மீன் வரத்து அதிகமாகவே உள்ளது. இதனால், மீன் விலை வழக்கத்தை விட குறைந்துள்ளது. ஏற்றுமதி மீன் விலையும் குறைந்துள்ளது. மீன் விலை இப்போதைக்கு அதிகரிக்க வாய்ப்பில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)