பதிவு செய்த நாள்
09 செப்2014
02:41
வரும் பருவத்தில் (நவ., – அக்.,), இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி, புதிய சாதனை அளவை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பருவமழை குறைவால், உள்நாட்டில், எண்ணெய் வித்துகள் சாகுபடி பரப்பு சரிவடைந்துள்ளது. இதனால், இவற்றின் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
புள்ளிவிவரம்:மத்திய வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, சென்ற ஆகஸ்ட் 21ம் தேதி நிலவரப்படி, உள்நாட்டில் சோயா சாகுபடி பரப்பு, 10 சதவீதம் (12.20 லட்சம் ஹெக்டேர்) சரிவடைந்து, 1.09 கோடி ஹெக்டேராகக் குறைந்துள்ளது.இதே போன்று, நிலக்கடலை பயிரிடும் பரப்பும், 14 சதவீதம் (5.66 லட்சம் ஹெக்டேர்) குறைந்து, 35.10 லட்சம் ஹெக்டேராக சுருங்கியுள்ளது.
விதைப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளதை அடுத்து, வரும் பருவத்தில், தாவர எண்ணெய் உற்பத்தி, 5 லட்சம் டன் குறையும் என, கணக்கிடப்பட்டுள்ளது.அதேசமயம், உள்நாட்டில், இதன் பயன்பாடு, வழக்கமான அளவைக் காட்டிலும், 3.5 – 4 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதாவது, சமையல் எண்ணெய் பயன்பாடு, வரும் பருவத்தில், 1.90 கோடி டன் என்ற புதிய உச்சத்தை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
கரீப் சாகுபடி:இந்நிலையில், கரீப் பருவத்தில் எண்ணெய் வித்துகள் சாகுபடியும் குறைந்துள்ளதால், சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பது என்பது இயற்கையானது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் செயல் இயக்குனர் பீ.வி.மேத்தா தெரிவித்தார்.கடந்தாண்டில், எண்ணெய் இறக்குமதி, 1.06 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு பருவத்தில், 1.10 கோடி டன்னாகவும், அடுத்த பருவத்தில், 1.20 கோடி டன்னாகவும் எகிறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, ருச்சி சோயா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தினேஷ் சகாரா கூறியதாவது:விலை குறைவு மற்றும் பொருளாதார சூழல் மேம்பாட்டால், நடப்பாண்டில், சமையல் எண்ணெய் இறக்குமதி, 1.15 கோடி டன்னாக இருக்கும். கடந்த நிதியாண்டுடன்ஒப்பிடும் போது, இதன் இறக்குமதி, நடப்பு நிதியாண்டில், 10 – 11 சதவீதம் அளவிற்கு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.விளம்பரம்ந்நிலையில், இதியாவில் சமையல் எண்ணெய் தேவை, குறைந்தபட்சம் 5 சதவீத அளவிற்காவது அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பாக்கெட் மற்றும் பிராண்டட் எண்ணெய் வகைகளின் பங்களிப்பு, 20 – 25 சதவீதம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பிராண்டட் சந்தை பங்களிப்பை நன்கு உணர்ந்த பல நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை பல்வேறு வடிவங்களில் அறிமுகம் செய்து விளம்பரப்படுத்தி வருகின்றன.இவ்வாறு சகாரா கூறினார்.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|