பதிவு செய்த நாள்
09 செப்2014
02:42
புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 6,372 கோடி ரூபாய் அதிகரித்து, 10.12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பங்கு வர்த்தகம்:இது, முந்தைய ஜூலை மாதத்தில், 10.06 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சென்ற மே மாதத்தில், முதன் முறையாக, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 10 லட்சம் கோடி ரூபாய் என்ற மைல் கல்லை தாண்டி சாதனை படைத்தது.பங்கு வர்த்தகம் நன்கு ருந்ததையடுத்து, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்குகளில், 5,217 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.இதையடுத்து, பங்கு சார்ந்த திட்டங்களில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 2.35 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இதேபோன்று, ‘பேலன்ஸ்டு பண்ட்’ திட்டங்களில், 448 யை முதலீடு செய்ததையடுத்து, இவ்வகையில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 17,293 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதுவருவாய் திட்டம்:மேலும் ‘லிக்விட் பண்ட்’ திட்டங்களில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 2.44 லட்சம் கோடியிலிருந்து, 2.45 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், ‘இன்கம் பண்டு’ எனப்படும் வருவாய் சார்ந்த திட்டங்களில், இந்நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 4.71 லட்சம் கோடியிலிருந்து, 4.61 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது என, பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|