பதிவு செய்த நாள்
09 செப்2014
16:50
மும்பை : உச்சத்தை தொட்ட பங்குசந்தைகள் இன்று(செப். 9ம் தேதி) சரிவை சந்தித்தன. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததாலும், முக்கிய நிறுவன பங்குகள் சரிந்ததாலும் இன்றைய வர்த்தகநேர துவக்கத்தின் போதே சரிவுடன் ஆரம்பித்த பங்குசந்தைகள் இறுதியிலும் சரிவுடனேயே முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 54.53 புள்ளிகள் சரிந்து 27,265.32-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 20.95 புள்ளிகள் சரிந்து 8,152.95-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 16 நிறுவன பங்குகள் சரிந்தும், 14 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன. குறிப்பாக எல்அண்ட்டி, பெல், ஆக்சிஸ், சிப்லா, கோல் இந்தியா, கெயில் டாடா மோட்டார்ஸ், ஐடிசி., மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா பவர், டாடா ஸ்டீல், பார்த்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|