பதிவு செய்த நாள்
12 செப்2014
01:54
புதுடில்லி: சென்ற ஜூலை மாத நிலவரப்படி, உள்நாட்டில், ஒட்டுமொத்த தொலைபேசி (மொபைல்போன் + சாதாரண தொலைபேசி) வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 94.64 கோடியை எட்டியுள்ளது.அடர்த்திஇது, ஜூன் மாத இறுதியில், 94.29 கோடியாக இருந்தது என, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.சென்ற ஜூன் மாதத்தில், 55.97 கோடியாக இருந்த நகர்புற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ஜூலை மாதத்தில், 56.24 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.
100 பேரில், எத்தனை பேரிடம் தொலைபேசி உள்ளது என்பதை எடுத்துக் காட்டும், தொலைத்தொடர்பு அடர்த்தி விகிதம், சென்ற ஜூலையில், 76 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஜூன் மாதத்தில், 75.80 சதவீதமாக இருந்தது. கணக்கீட்டு மாதத்தில், மொபைல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 0.42 சதவீதம் வளர்ச்சி கண்டு, 91.49 கோடியிலிருந்து, 91.87 கோடியாக உயர்ந்துள்ளது.மொபைல்போன் சேவையில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு, 90.05 சதவீதமாக உள்ளது. அதேசமயம், பீ.எஸ்.என்.எல்., உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு, 9.95 சதவீத அளவிற்கே உள்ளது.தனியார் நிறுவனங்களை பொறுத்த மட்டில், வோடபோன் நிறுவனம், சென்ற ஜூலையில், அதிகளவாக, 13.6 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொபைல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 17.12 கோடியாக உயர்ந்து உள்ளது.பார்தி ஏர்டெல் நிறுவனம், மதிப்பீட்டு மாதத்தில், 5.10 லட்சம் பேரை இணைத்து கொண்டதையடுத்து, ஒட்டு மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 20.97 கோடியை எட்டியுள்ளது.
இதே போன்று, ஐடியா செல்லுலார் நிறுவனம், 11 லட்சம் பேரையும் (14.01 கோடி), யுனிநார் 8.53 லட்சம் பேரையும் (4.01 கோடி), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 5 லட்சம் பேரையும் (10.93 கோடி), டாட்டா டெலிசர்வீசஸ் 6.13 லட்சம் பேரையும் (6.34 கோடி), ஏர்செல் 9.17 லட்சம் பேரையும் (7.39 கோடி) இணைத்து கொண்டுள்ளன.அதேசமயம், பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல்., நிறுவனம் கணக்கீட்டு மாதத்தில், 13.97 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 8.80 கோடியாக சரிவடைந்துள்ளது.சென்ற ஜூலை நிலவரப்படி, மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி எனப்படும், ஒரே மொபைல் எண்ணை தக்க வைத்து கொண்டு, வேறு ஒரு சேவை நிறுவனங்களுக்கு மாறும் வசதிக்கு விண்ணப்பித்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 28.60 லட்சமாக உள்ளது என, டிராய் தெரிவித்துள்ளது.
அகண்ட அலைவரிசைசென்ற ஜூலையில், சாதாரண தொலைபேசி (லேண்டு லைன்) சந்தாதாரர் எண்ணிக்கை, 2.80 கோடியிலிருந்து, 2.76 கோடியாக குறைந்துள்ளது.சாதாரண தொலைபேசி சந்தை பங்களிப் பில், பீ.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகிய இரு நிறுவனங்களின் பங்களிப்பு, 76.55 சதவீதமாக உள்ளது. சென்ற ஜூன் மாதத்தில், 6.88 கோடியாக இருந்த அகண்ட அலைவரிசை சேவை சந்தாதாரர் எண்ணிக்கை, சென்ற ஜூலையில், 7.08 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|