பதிவு செய்த நாள்
12 செப்2014
02:09
மும்பை: சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், இந்திய பங்குச் சந்தைகளில் தொடர் சுணக்கம் நிலவி வருகிறது.அமெரிக்கா வட்டி விகிதங்களை உயர்த்தும் என்ற நிலைப்பாடு மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற மதிப்பீடு போன்றவற்றால், சர்வதேச அளவில் பங்கு வியாபாரம் மந்தகதியில் உள்ளது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது.நேற்றைய வியாபாரத்தில், மருந்து துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 1.73 சதவீதம் சரிவை கண்டது.
இதையடுத்து, உலோகம் (–1.08 சதவீதம்), ரியல் எஸ்டேட் (–0.34 சதவீதம்) உள்ளிட்ட துறைகள் உள்ளன.அதேசமயம், பொறியியல், மின்சாரம், நுகர்பொருட்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. நேற்றைய வர்த்தகத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 434 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளன. அதேசமயம், உள்நாட்டு நிதி நிறுவனங்கள், 531 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து உள்ளன.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 61.54 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 26,995.87 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சன்பார்மா, கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பெல், கெயில் உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 8.40 புள்ளிகள் குறைந்து, 8,085.70 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|