தங்கம் விலை ரூ.128 அதிகரிப்புதங்கம் விலை ரூ.128 அதிகரிப்பு ... சென்னை நோக்கியா ஆலைக்கு விரைவில் மூடுவிழா சென்னை நோக்கியா ஆலைக்கு விரைவில் மூடுவிழா ...
தலைதுாக்கிய மின்வெட்டு தொழில் துறையினர் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2014
23:53

திருப்பூர்:திருப்பூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளில், மூன்று மணி நேரம் வரையிலும், நகர பகுதிகளில் ஒரு மணி நேரம் வரையிலும் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுகிறது.திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், பின்னலாடை உற்பத்தி, நுால் மில்கள், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகள், இயந்திர உற்பத்தி தொழிற்சாலைகள், கறிக்கோழி உற்பத்தி தொழில் என, சிறப்பு வாய்ந்த தொழில்கள் நிரம்பிய பகுதியாக உள்ளது.
மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ஆறு லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இவற்றிற்கு, 500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. காற்றாலை மின் உற்பத்தி முடிந்த தால், மீண்டும் மின்வெட்டு தலைகாட்ட துவங்கியுள்ளது. முதல்கட்டமாக, உயர் மின்னழுத்த தொழிற்சாலைகள், ‘பீக் ஹவர்ஸ்களில் 20 சதவீதம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள 432 உயரழுத்த பயன்பாட்டு தொழிற்சாலைகளுக்கு, ‘நோட்டீஸ் வழங்கப் பட்டது. இதில், சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், அரிசி, மாவு, பால் தொழிற்சாலை களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அனைத்து பகுதிகளிலும் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக குறிப்பிட்ட நேரம் மின் தடை செய்தால், சிக்கல் ஏற்படும் என்பதால், மின் பற்றாக்குறைக்கு ஏற்ப பீடர்கள் வாரியாக மின் தடை செய்யப்படுகிறது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் குறிப்பிட்ட காலத்தில் பண்டிகை கால ஆர்டர்களை முடிக்க வேண்டிய நிலையில், இந்த திடீர் மின் தடையால் தொழில் துறையினர் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
தீபாவளி வியாபாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், ஏற்பட்டுள்ள இந்த மின்வெட்டு பிரச்னை வணிக நிறுவனங்களையும் வெகுவாக பாதித்துள்ளது. கிராமப் புறங்களில் விவசாயத்துக்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரம் குறைந்துள்ளதால், நிலைப்பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.காற்றாலை மின் உற்பத்தி, என்.எல்.சி., உற்பத்தி பாதிப்பு, நிலக்கரி பற்றாக்குறை என பல காரணங்களால் மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, மின்வாரியத்தினர் கூறுகின்றனர்.
கோவை மின்வாரிய தலைமை பொறியாளர் மனோகரனிடம் இதுபற்றி கேட்ட போது, ‘‘உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பற்றாக்குறையை பொறுத்து மின்வெட்டு செய்யப்படுகிறது, என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)