பதிவு செய்த நாள்
09 அக்2014
17:09
மும்பை : இந்திய பங்குசந்தைகள் கடந்த சில தினங்களாக சரிவை சந்தித்த நிலையில் இன்று(அக்., 9ம் தேதி) அதிக ஏற்றத்துடன் துவங்கி, அதிக உயர்வுடன் முடிந்தது. அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதங்களை உயர்த்தப்போவது இல்லை என்று அறிவித்து இருப்பதாலும், முக்கிய நிறுவன பங்குகள் உயர்ந்ததாலும் இன்றைய வர்த்தகம் நன்கு எழுச்சியுடன் இருந்தன. வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 390.49 புள்ளிகள் உயர்ந்து 26,637.28-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 117.85 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 7900 புள்ளிகளை கடந்து 7,960.55-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 25 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக பெல் நிறுவன பங்குகள் 8.37 சதவீதமும், ஹிண்டால்கோ பங்குகள் 6.01 சதவீதமும், எஸ்பிஐ., 2.84 சதவீதமும், விப்ரோ பங்குகுள் 0.83 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|