பதிவு செய்த நாள்
12 அக்2014
01:18

மும்பை: நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, கடந்த, 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 16,500 கோடி ரூபாய் (275 கோடி டாலர்) குறைந்து, 31,143 கோடி டாலராக சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து மதிப்பு:அன்னியச் செலாவணி கையிருப்பு, தொடர்ந்து 5 வாரங்களாக குறைந்து வருகிறது. இதற்கு, டாலர் அல்லாத இதர செலாவணிகளின் சொத்து மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளதே முக்கிய காரணம்.கடந்த செப்., 26ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு, 141 கோடி டாலர் குறைந்து, 31,418 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 32,056 கோடி டாலராகவும், செப்., 2ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், முதன் முறையாக, 32,079 கோடி டாலர் என்ற புதிய உச்சத்தையும் தொட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.கணக்கீட்டு வாரத்தில், முக்கிய பங்களிப்பை கொண்டுள்ள அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 180 கோடி டாலர் வீழ்ச்சியடைந்து, 28,559 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.கடந்த சில வாரங்களாக, மாற்றமின்றி இருந்த, தங்கத்தின் கையிருப்பு மதிப்பு, மதிப்பீட்டு வாரத்தில், 92 கோடி டாலர் சரிவடைந்து, 2,001 கோடி டாலராக குறைந்துள்ளது.
சர்வதேச நிதியம்:மேலும், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 2 கோடி டாலர் குறைந்து, 428 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் கையிருப்பு, 82 லட்சம் டாலர் சரிவடைந்து, 154 கோடி டாலராகவும் வீழ்ச்சி கண்டுள்ளன என, ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|