பதிவு செய்த நாள்
14 அக்2014
01:05
குன்னுார்:குன்னுார் ஏல மையங்களில், 40 சதவீத தேயிலை துாள், விற்பனையாகாமல் தேக்கமடைந்து வருகிறது.நீலகிரி மாவட்டம் முழுவதும், தொடர் மழையின் காரணமாக, பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது. இதனால், கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில், தேயிலை துாள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், குன்னுாரில் உள்ள ஏல மையங்களுக்கு வரும் தேயிலை துாள், வாரந்தோறும், 40 சதவீதம் வரை விற்பனையாகாமல் தேக்கமடைந்து வருவதால், பசுந்தேயிலைக்கு உண்டான விலையும் சரிகிறது.இந்த வாரத்தில் மட்டும், சாதாரண ரக பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு, 10 ரூபாய் முதல், 12 ரூபாய்; நடுத்தர ரகத்திற்கு, 17 ரூபாய்; உயர் ரகத்திற்கு, 21 ரூபாய் விலை கிடைத்துள்ளது.இது போன்ற சூழலில், பசுந்தேயிலைக்கு உண்டான வார விலை உயராததால், சிறு விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|