பதிவு செய்த நாள்
14 அக்2014
10:31
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் உயர்ந்தது, செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் 6.46 சதவீதமாக குறைந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 123.18 புள்ளிகள் உயர்ந்து 26,507.25-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 21.50 புள்ளிகள் உயர்ந்து 7,905.75-ஆகவும் இருந்தன. இருப்பினும் டிஎல்எப்., நிறுவன பங்குகளால் பங்குசந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. அந்த நிறுவனத்தின் 6 இயக்குநர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது செபி. இதன்காரணமாக அந்நிறுவ பங்குகள் 19 சதவீதம் வரை சரிவுடன் காணப்படுகிறது. இதனால் ஏற்றத்தில் இருந்த இந்திய பங்குசந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. காலை 10.20 மணியளவில் சென்செக்ஸ் 18.62 புள்ளிகள் சரிந்து 26,365.45-ஆகவும், நிப்டி 10.60 புள்ளிகள் சரிந்து 7,863.65-ஆகவும் சரிந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|