ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 2.38 சதவீதமாக குறைவுஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 2.38 சதவீதமாக குறைவு ... பெட்ரோல் விலை குறைப்பு! - டீசல் விலை இன்று குறைய வாய்ப்பு...! பெட்ரோல் விலை குறைப்பு! - டீசல் விலை இன்று குறைய வாய்ப்பு...! ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது - டிஎல்எப் பங்குகள் 28 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2014
16:56

மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் துவங்கிய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. குறிப்பாக டிஎல்எப் நிறுவன பங்குகள் 28 சதவீதம் சரிவை சந்தித்தன.
செப்டம்பர் மாதத்திற்கான சில்லரை வர்த்தக பணவீக்கம் 6.46 சதவீதமாக குறைந்தது மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு உயர்ந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் முறைகேடு தொடர்பாக டிஎல்எப்., நிறுவனத்தின் இயக்குநர்கள் 6 பேருக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து செபி உத்தரவிட்டது. இதன்காரணமாக அந்நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இதனால் இந்திய பங்குசந்தைகளும் சரிவடைய தொடங்கின. மேலும் முதலீட்டாளர்களும் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்றதால், பங்குவர்த்தகம் சரிவிலேயே இருந்தது. அதேசமயம் மதிய நேரத்தில் செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் வெளியானது. இதில் பணவீக்கம் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.38 சதவீதமாக குறைந்தது. இதனால் பங்குசந்தைகள் சற்று முன்னேற்றம் கண்டன. இறுதியில் சிறு சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 34.74 புள்ளிகள் சரிந்து 26,349.33-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 20.25 புள்ளிகள் சரிந்து 7,864.00-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், 14 நிறுவன பங்குகள் சரிவில் முடிந்தன. குறிப்பாக டிஎல்எப்., நிறுவன பங்குகள் 28 சதவீதம் சரிந்தது. இவை தவிர்த்து எச்டிஎப்சி., ஓஎன்ஜிசி., டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ்., விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகளும் சரிந்தன. அதேசமயம் பெல், ஆக்சிஸ், எஸ்பிஐ., பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)