பதிவு செய்த நாள்
14 அக்2014
16:56
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் துவங்கிய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. குறிப்பாக டிஎல்எப் நிறுவன பங்குகள் 28 சதவீதம் சரிவை சந்தித்தன.
செப்டம்பர் மாதத்திற்கான சில்லரை வர்த்தக பணவீக்கம் 6.46 சதவீதமாக குறைந்தது மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு உயர்ந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் முறைகேடு தொடர்பாக டிஎல்எப்., நிறுவனத்தின் இயக்குநர்கள் 6 பேருக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து செபி உத்தரவிட்டது. இதன்காரணமாக அந்நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இதனால் இந்திய பங்குசந்தைகளும் சரிவடைய தொடங்கின. மேலும் முதலீட்டாளர்களும் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்றதால், பங்குவர்த்தகம் சரிவிலேயே இருந்தது. அதேசமயம் மதிய நேரத்தில் செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் வெளியானது. இதில் பணவீக்கம் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.38 சதவீதமாக குறைந்தது. இதனால் பங்குசந்தைகள் சற்று முன்னேற்றம் கண்டன. இறுதியில் சிறு சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 34.74 புள்ளிகள் சரிந்து 26,349.33-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 20.25 புள்ளிகள் சரிந்து 7,864.00-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், 14 நிறுவன பங்குகள் சரிவில் முடிந்தன. குறிப்பாக டிஎல்எப்., நிறுவன பங்குகள் 28 சதவீதம் சரிந்தது. இவை தவிர்த்து எச்டிஎப்சி., ஓஎன்ஜிசி., டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ்., விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகளும் சரிந்தன. அதேசமயம் பெல், ஆக்சிஸ், எஸ்பிஐ., பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|