பதிவு செய்த நாள்
15 அக்2014
11:46
சிங்கப்பூர்: ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவில் எண்ணெய் தேவை குறைந்ததால், ஆசிய சந்தையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரப்படி, இந்தியாவில், பெட்ரோல் விலை நேற்று குறைக்கப்பட்டது. டீசல் விலை இன்று குறைக்கப்படலாம்.
வரும் நவம்பர் மாதத்தில் சப்ளை செய்யப்பட வேண்டிய, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், நேற்று, 65 சென்ட் குறைந்து, 85.09 அமெரிக்க டாலராக இருந்தது. அது போல, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, 74 சென்ட் குறைந்து, 88.15 ஆக இருந்தது; இது, 2010ம் ஆண்டு மத்தியில் இருந்த விலை நிலவரத்தை விட மிகக் குறைவு.அமெரிக்காவில், ஷேல் காஸ் எனப்படும் இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரிப்பு, லிபியா நாட்டின் கச்சா எண்ணெய் சந்தைக்கு வரத்து துவக்கம், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல் தேவை குறைந்தது போன்ற பல காரணங்கள், விலை வீழ்ச்சிக்கு கூறப்படுகிறது.மேலும், ஒபெக் எனப்படும், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு, இப்போதைக்கு தங்கள் உற்பத்தியை குறைக்கும் எண்ணமில்லை என தெரிவித்ததை அடுத்து, சந்தையில் போதுமான அளவு எண்ணெய் சப்ளை இருக்கும் என்ற நம்பிக்கையால், ஆசிய சந்தையில் பெட்ரோல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
குவைத் எண்ணெய் துறை அமைச்சர் அலி அல் ஒமர், கடந்த ஞாயிறு அன்று கூறுகையில், 'வட துருவ நாடுகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், எண்ணெய் விலை மீண்டும் உயரும்' என்றார். ஆனால், ஒபெக் எனப்படும், எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு, அதை ஏற்றுக்கொள்ளவில்லை; விலை குறையும் என தெரிவித்தது போல, குறைந்து வருகிறது.சர்வதேச சந்தை விலை நிலவரப்படி, கச்சா எண்ணெய் விலை, பேரல் ஒன்றுக்கு, 88 அமெரிக்க டாலருக்கும் குறைவாக உள்ளதால், இந்தியாவிலும் டீசல் விலை குறைப்பு செய்யப்பட உள்ளது.
கச்சா எண்ணெய் விலை, சர்வதேச சந்தையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதால், இந்தியாவிலும் டீசல் விலையில், லிட்டருக்கு, 1.50 ரூபாய் முதல், 2.50 ரூபாய் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது; இதற்கான அறிவிப்பு, இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் இன்று மாலை நிறைவடைவதால், இன்று இரவில், டீசல் விலை குறைப்பு அறிவிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.இதற்கிடையே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், வரும் ௧௯ம் தேதி தான் டீசல் விலை மாற்ற அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல், பெட்ரோல் விலையில், 1.28 ரூபாய் குறைக்கப்பட்டது.
மானிய சுமை குறையும்:இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில், ஏறக்குறைய, 70 சதவீதம், நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது. 30 சதவீதம் தான், ஸ்பாட் மார்க்கெட் எனப்படும், அந்தந்த நாள் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாறும் விதத்தில் வாங்கப்படுகிறது.கடந்த சில வாரங்களாகவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், இந்த முறை, இந்தியாவில் இந்தப் பொருட்களின் விலை குறைப்பு, சற்று அதிகமாக இருக்கும் என நம்பலாம்.மேலும், இதனால் அரசுக்கும் மானியச் சுமை குறையும் என்பதால், பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் கிடைக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|