பெட்ரோல் விலை குறைப்பு! - டீசல் விலை இன்று குறைய வாய்ப்பு...!பெட்ரோல் விலை குறைப்பு! - டீசல் விலை இன்று குறைய வாய்ப்பு...! ... தங்கம் விலை ரூ.24 குறைவு தங்கம் விலை ரூ.24 குறைவு ...
கிளை நிறுவனங்கள் துவக்கி டி.எல்.எப்., மோசடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2014
11:48

புதுடில்லி: நாட்டின் பிரபல நிறுவனங்கள், பங்குச்சந்தையில் முதலீடு திரட்டுவதற்காக, ஏராளமான கிளை நிறுவனங்களை துவக்கி, அதன் மூலம் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்து வந்துள்ளன என்பது, டி.எல்.எப்., மோசடி மூலம் அம்பலமாகியுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான, டி.எல்.எப்.,பின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு பங்குச்சந்தையில் ஈடுபட, செபி எனப்படும் பங்கு, பரிவர்த்தனை கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்துள்ளது. அதற்கு காரணம், அந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளின் மனைவியர் பெயரில், கிளை நிறுவனங்கள் துவக்கி, முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாயை ஏமாற்றியது தான் என்பது தெரிய வந்துள்ளது.இது போல், நாட்டின் பிரமாண்டமான பல நிறுவனங்கள், துணை மற்றும் கிளை நிறுவனங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி, மோசடி செய்து வந்துள்ளன என்பதும் அம்பலமாகியுள்ளது.
இதில் சில நிறுவனங்கள், வெளிப்படையாக இந்த முறைகேட்டை ஒப்புக் கொண்டுள்ளன; சில, அவ்வாறு எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளன.டி.எல்.எப்., நிறுவனத்தின் இந்த மோசடியை அம்பலப்படுத்தியது, டில்லி தொழிலதிபர், கே.கே.சின்ஹா என்பவர். இவர், டி.எல்.எப்., நிறுவனத்தின் கிளை நிறுவனம் என அறிவிக்கப்பட்ட சுதிப்தி எஸ்டேட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அதில் சில பிரச்னைகள் ஏற்பட்டதும், அதன் பங்குதாரர்கள் என முன்னர் அறிவிக்கப்பட்ட, டி.எல்.எப்., நிறுவனத்திடம் பதில் கேட்டுள்ளார்.
அப்போது, அவர் முதலீடு செய்த நிறுவனத்திற்கும் தன் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை என, டி.எல்.எப்., தெரிவித்துள்ளது.இதனால் ஏமாற்றம் அடைந்ததாக கருதிய சின்ஹா, செபியிடம் புகார் கூறினார். அதன் பிறகு, இந்த விவகாரம் டில்லி உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. அதற்குப் பிறகு, செபி மேற்கொண்ட விரிவான விசாரணைக்குப் பிறகுதான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது போல பல இந்திய நிறுவனங்கள், தங்களின் கிளை நிறுவனங்களை அறிவிப்பதும், பிரச்னை ஏற்பட்ட பிறகு, தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என கூறுவதும் வாடிக்கையாக உள்ளது என, முதலீட்டாளர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)