பதிவு செய்த நாள்
16 அக்2014
00:54
புதுடில்லி சர்வதேச சந்தையில் விலை சரிவு மற்றும் பண்டிகை கால எதிரொலியால், கடந்த செப்டம்பரில், தங்கம் இறக்குமதி பன்மடங்கு உயர்ந்துள்ளதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
இதன்படி, கடந்தாண்டு செப்டம்பரில், வெறும் 68.25 கோடி டாலர் அளவிற்கு இருந்த தங்கம் இறக்குமதி, நடப்பாண்டு செப்டம்பரில், 375 கோடி டாலராக எகிறியுள்ளது.இதையடுத்து, அம்மாதத்தில், நாட்டின் ஒட்டு மொத்த இறக்குமதி, 26 சதவீதம் அதிகரித்து, 4,315 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், இந்தியாவின் ஏற்றுமதி, சென்ற செப்டம்பரில், 2.73 சதவீதம் மட்டுமே அதிகரித்து, 2,890 கோடி டாலராக உள்ளது.
இந்நிலையில், தங்கம் இறக்குமதி எகிறியுள்ளதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை, கடந்த செப்டம்பரில், இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 1,420 கோடி டாலராக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி 6.47 சதவீதம் வளர்ச்சி கண்டு, 16,370 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.
இதே காலத்தில், இறக்குமதி, 1.57 சதவீதம் அதிகரித்து, 23,400 கோடி டாலராக உள்ளது. இதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை, 7,030 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.ஒரு நாட்டின் ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரிக்கும் போது வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|