பதிவு செய்த நாள்
16 அக்2014
10:02
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(அக்., 16ம் தேதி) சரிவுடன் துவங்கின. இருப்பினும் முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் பங்குசந்தைகள் சற்றுநேரத்திலேயே ஏற்றம் கண்டன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கம் காரணமாக இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 100.86 புள்ளிகள் சரிந்து 26,248.47-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 27.55 புள்ளிகள் சரிந்து 7,836.45-ஆகவும் இருந்தன. ஆனால் சற்று நேரத்திலேயே டிசிஎஸ்., ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் பங்குசந்தைகள் உயர்ந்தன. காலை 10.00 மணியளவில் சென்செக்ஸ் 48.16 புள்ளிகள் உயர்ந்து 26,397.49-ஆகவும், நிப்டி 7 புள்ளிகள் உயர்ந்து 7,871-ஆகவும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|