பதிவு செய்த நாள்
16 அக்2014
17:50
புதுடில்லி: அதிகரித்து வரும் உருளைக்கிழங்கு விலையை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே உருளைக்கிழங்கு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தலைநகர் டில்லியில் உருளைக்கிழங்கு விலை கிலோ, ரூ.35 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் உயர்ந்து வரும் விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறியுள்ளார்.
இதனிடையே வெளிநாடுகளில் இருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக விவசாயத்துறை செயலர் ஆசிஷ் பகுனா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், முதன்முறையாக நாங்கள் உருளைக்கிழங்கை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளோம். இதன்மூலம் ஓரளவுக்கு விலையை கட்டுப்படுத்த முடியும், மேலும் பொதுமக்களுக்கும் தட்டுப்பாடு இன்றி உருளைக்கிழங்கு கிடைக்க இது வழி வகுக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|