பதிவு செய்த நாள்
18 அக்2014
23:26
ஈரோடு:ஈரோடு, அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் வியாபாரிகளின் வருகை, மழையால் சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக, 1,370 கொப்பரை மூட்டைகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
அதிக விலை:வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருவதால், கடந்த வாரம், 2,500 மூட்டை கொப்பரை விற்பனைக்கு வந்த நிலையில், இந்த வாரம், 1,370 மூட்டையாக குறைந்தது.இதுபற்றி, அவல்பூந்துறை, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அர்ஜூனன் கூறியதாவது:மூன்றாண்டாக வறட்சி பாதித்ததால், கொப்பரை வரத்து, 4,000 – 5,000 மூட்டையில் இருந்து, 1,000 – 1,500 மூட்டையாக குறைந்தது.
பிற விற்பனை மையங்களைவிட, இங்கு அதிக விலை கிடைக்கும் என்பதால், ஈரோடு சுற்றுப்புற கொப்பரை விவசாயிகளைவிட, மைசூரு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் வரத்து அதிகமாக இருக்கும்.போக்குவரத்து பிரச்னை:தற்போது வடகிழக்கு பருவமழை, அனைத்து பகுதிகளிலும் பரவலாக பெய்வதால், போக்குவரத்து பிரச்னையை தவிர்க்கும் விதமாக, வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளது.
இதனால், கடந்த வாரம், 2,500 மூட்டை கொப்பரை வரத்தான நிலையில், இந்த வாரம், 1,370ஆக குறைந்துள்ளது.முதல் ரக கொப்பரை, 90.50 முதல், 101.15 ரூபாய் வரையும், இரண்டாவது ரகம், 76.10 முதல் 93.65 ரூபாய் வரையும் விற்பனையானது. எண்ணெய் சந்தையை பொறுத்து, கொப்பரைக்கு விலை கிடைக்கும். எண்ணெய் விலை சரிந்துள்ளதால், கொப்பரைக்கும் குறைந்த விலையே கிடைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|