பதிவு செய்த நாள்
18 அக்2014
23:28
புதுடில்லி:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, அக்., 10ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 7,860 கோடி ரூபாய் (131 கோடி டாலர்) அதிகரித்து, 18.76 லட்சம் கோடி ரூபாயாக (31,274 கோடி டாலர்) வளர்ச்சி கண்டுள்ளது.
தொடர்ந்து ஐந்து வாரங்களாக சரிவடைந்து வந்த அன்னியச் செலாவணி கையிருப்பு, மதிப்பீட்டு வாரத்தில், இரண்டரை மாதங்களில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. கணக்கீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 130 கோடி டாலர் உயர்ந்து, 28,688 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு மதிப்பு, 2,001 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மற்றும் சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் கையிருப்பு முறையே, 429 கோடி டாலர் மற்றும் 154 கோடி டாலர் என்ற அளவில் சற்று அதிகரித்துள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|