பதிவு செய்த நாள்
24 அக்2014
02:48
மும்பை: வரும் 2021ம் ஆண்டிற்குள், இந்திய இணையதள வர்த்தக துறை சந்தை மதிப்பு, 5.40 லட்சம் கோடி ரூபாயை (9 ஆயிரம் கோடி டாலர்) எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது, தற்போது, 78 ஆயிரம் கோடி ரூபாயாக (1,300 கோடி டாலர்) உள்ளது என, இடெய்லிங் இந்தியாவின் நிறுவனர் ஆசிஷ் ஜலானி தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சில்லரை வர்த்தக துறையில், ஒரு சிறு பகுதியாக இருந்த இணையதள வணிகம், தற்போது மிகப் பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.
இதனால், சில்லரை வர்த்தகம் மட்டுமின்றி, விளம்பர துறையிலும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில், ஸ்மார்ட் போன் பயன்பாடு துரிதகதியில் வளர்ச்சி கண்டு வருவதையடுத்து, அதை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. இதை எடுத்துக்காட்டும் விதமாக, பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் உள்ளிட்ட இணையதள வர்த்தக நிறுவனங்களின் மொத்த விற்பனையில், ஸ்மார்ட் போன்கள் மூலம் பொருட்கள் வாங்குவோரின் பங்களிப்பு, 35 சதவீதமாக உள்ளது.நடப்பாண்டின் இறுதிக்குள், இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, அமெரிக்காவை விஞ்சும் வகையில் இருக்கும் என, கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது.
இதன்படி, வரும் 2018ம் ஆண்டிற்குள், இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 50 கோடி என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்றவற்றால், அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள், இந்தியாவில் இணையதள வணிக சந்தை, 9,000 கோடி டாலரை எட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|