பதிவு செய்த நாள்
28 அக்2014
16:46
மும்பை : இந்திய பங்குசந்தைகள் நேற்று சரிவை சந்தித்த நிலையில் இன்று(அக்., 28) உயர்வுடன் முடிந்தன. கார்பரேட் நிறுவனங்களின் லாபம் உயர்ந்து இருப்பது, ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக வங்கி மற்றும் மருத்துவ துறை சார்ந்த பங்குகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்திய பங்குசந்தைகள் அதிக ஏற்றம் கண்டதோடு, நிப்டி மீண்டும் 8 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 127.92 புள்ளிகள் உயர்ந்து 26,880.82-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 35.90 புள்ளிகள் உயர்ந்து 8,027.60-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 17 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் சன்பார்மா பங்குகள் 4.64 சதவீதமும், சிப்லா நிறுவன பங்குகள் 3.31 சதவீதமும், எஸ்பிஐ., பங்குகள் 2.67 சதவீதமும், ஐசிஐசிஐ., பங்குகள் 1.76 சதவீதமும், டாடா பவர் பங்குகள் 2.48 சதவீதமும் ஏற்றம் கண்டு இருந்தன. இவை தவிர்த்து கெயில், பெல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எச்டிஎப்சி., டிசிஎஸ்., எல்அண்ட்டி, கோல் இந்தியா போன்ற பங்குகளும் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|