பதிவு செய்த நாள்
31 அக்2014
06:24
திருப்பூர் :வெளிநாடுகளில் இருந்து குறுகிய கால ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வர துவங்கியுள்ளன.கோடை, குளிர், பண்டிகை கால ஆடை உற்பத்திக்கான ஆர்டர்களை, வெளிநாட்டு ‘பையர்’கள் வழங்குவர்.குளிர் கால ஆடைகள் ஏற்றுமதி முடிந்துள்ள நிலையில், கோடை கால ஆடை உற்பத்திக்கான ஆர்டர் பெற, தொழில் துறையினர் முயற்சித்து வருகின்றனர்.தற்போது, பல நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து குறுகிய கால ஆடை உற்பத்தி ஆர்டர்கள் வர துவங்கியுள்ளன.
இவற்றை தயாரித்து அனுப்ப, 30 நாள் மட்டுமே அவகாசம் வழங்கப்படுகிறது. கோடை கால ஆடை உற்பத்தி துவங்க, ஒரு மாதம் உள்ள நிலையில், குறுகிய கால ஆர்டர் பெற்று, ஆடை உற்பத்தியை துரிதப்படுத்தியுள்ளனர், தொழில் துறையினர்.பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், ‘கூடுதல் ஆடை தேவைக்காக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து குறுகிய கால ஆடை உற்பத்தி ஆர்டர்கள் வருகின்றன. தொடர்ந்து ஆர்டர்கள் வருவதால், தொழில் துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்,’ என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|