பதிவு செய்த நாள்
31 அக்2014
06:25
புதுடில்லி: இந்திய பங்குச் சந்தைகளில், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான (பார்டிசிப்பேட்டரி நோட்ஸ்) அன்னிய முதலீடு, கடந்த செப்டம்பரில், 2.22 லட்சம் கோடி ரூபாயாக (3,600 கோடி டாலர்) உள்ளது.நடப்பாண்டு ஆகஸ்ட்டில், இந்த முதலீடு, 2.11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.கடந்த ஜூன் மாதத்தில் தான், பங்கேற்பு ஆவணங் கள் வாயிலான முதலீடு அதிகளவாக, 2.24 லட்சம் கோடி ரூபாயை எட்டியிருந்தது. அதன்பின், செப்டம்பரில் தான் இந்த முதலீடு சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் அதிக நிகரசொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள், அன்னிய நிதி நிறுவனங்கள் வெளியிடும் பங்கேற்பு ஆவணங்கள் மூலம், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதனால், அவர்களுக்கு நேரம், செலவு ஆகியவை மிச்சமாகின்றன. இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றத்திற்கு, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அவசியமாக உள்ளது.கடந்த செப்டம்பரில், அன்னிய நிதி நிறுவனங்கள், நிகர அளவில் பங்குகளில், 5,100 கோடி ரூபாயையும், கடன்பத்திர சந்தையில், 16 ஆயிரம் கோடி ரூபாயையும் முதலீடு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|