பதிவு செய்த நாள்
04 நவ2014
01:21
சென்னை: தேசியமயமாக்கப்பட்ட சிண்டிகேட் வங்கியில், பெண் தொழில் முனைவோருக்கு அதிகாரமளிக்கும் வகையில், ‘சிண்ட் மகிளா சக்தி’ திட்டம் துவங்கப்பட்டுள்ளது.பெண் தொழில் முனைவோர், தங்கள் தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியுதவியை அளிக்கும் நோக்கத்தில், இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், குறைந்த வட்டியில், 500 லட்சம் ரூபாய் வரை கடனுதவி அளிக்கப்படும். 10 லட்சம் வரையிலான கடனுக்கு, 10.25 சதவீதம், 10 லட்சம் ரூபாய்க்கு மேலான கடன்களுக்கான வட்டியில், 0.25 சதவீதம் சலுகை வழங்கப்படும். பத்து லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு பிணையம் கிடையாது. கடன்களுக்கான நடைமுறை மற்றும் ஆவண கட்டணங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். தேசிய சிறு தொழில் கழகம், அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு, மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம், அல்லது ‘ரட்செட்டி’யில் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|