பதிவு செய்த நாள்
04 நவ2014
23:54
புதுடில்லி:நாடு தழுவிய அளவில், இன்டர்நெட் பயன்பாட்டில், சென்னை ஐந்தாவது இடத்தில் உள்ளது என, இந்திய இண்டர்நெட் மற்றும் மொபைல் கூட்டமைப்பு (ஐ.ஏ.எம்.ஏ.ஐ.,) தெரிவித்துள்ளது.உள்நாட்டில், இன்டர்நெட் பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கை, 24.30 கோடியாக உள்ளது. இதில், மும்பை, 1.64 கோடி பங்களிப்புடன் (அக்டோபர்–2014 நிலவரம்) முதலிடத்தில் உள்ளது. கடந்தாண்டின் இதே மாதத்தில், இந்த எண்ணிக்கை, 1.20 கோடியாக இருந்தது.
இதையடுத்து, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு நகரங்களில், இன்டர்நெட் உபயோகிப்போரின் எண்ணிக்கை முறையே, 1.21 கோடி, 62.70 லட்சம், 59.90 லட்சம் என்ற அளவில் உள்ளன. ஐந்தாவது இடத்தில் உள்ள சென்னையில், 55.80 லட்சம் பேர் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை, ஐதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய முதல் எட்டு நகரங்களில் மட்டும் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 5.80 கோடியாக உள்ளது.
மேற்கண்ட நகரங்கள் தவிர்த்து, சூரத் (29.70 லட்சம்), ஜெய்பூர் (23.50 லட்சம்), லக்னோ (19.50 லட்சம்) மற்றும் வதோதரா (18.50 லட்சம்) ஆகிய நகரங்களிலும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது என, ஐ.ஏ.எம்.ஏ.ஐ., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|