பதிவு செய்த நாள்
04 நவ2014
23:57
முதலீட்டு நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளதை எடுத்துக்காட்டும் விதமாக, செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்திய நிறுவனங்களுக்கு, 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு புதிய ஆர்டர்கள் கிடைத்துள்ளன.இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 45 சதவீதம் அதிகம்.மத்திய அரசு சீர்திருத்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு வருவதையடுத்து, டிசம்பர் காலாண்டிலும் இதே நிலை தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு காலாண்டில், இதுவரையிலுமாகவே, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான புதிய ஆர்டர்கள் பெறப்பட்டு உள்ளன.இதில், பொறியியல் சாதனங்கள் தயாரிப்பு துறை நிறுவனங்கள், 85 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, கட்டுமானம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறையின் பங்களிப்பு, 12 சதவீதமாக உள்ளது.நடப்பாண்டில், ஏப்ரல் – ஆகஸ்ட் வரையிலான காலத்தில், தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (டி.ஐ.பி.பி.,), ஒட்டு மொத்த அளவில், 2.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது, முதலீட்டு நடவடிக்கைகள் விறுவிறுப்பிற்கும், புதிய ஆர்டர்கள் அதிகளவில் கிடைப்பதற்கும் வழிவகுத்துள்ளது.குறிப்பாக, பெல் நிறுவனம், 12,081 கோடி ரூபாய்க்கான புதிய ஆர்டர்களை பெற்றுள்ளது. இதே போன்று, எல் அண்டு டி நிறுவனத்திற்கு, 8,072 கோடிக்கும், ஐ.எல் அண்டு எப்.எஸ்.,க்கு, 1,412 கோடி ரூபாய்க்கும் புதிய ஆர்டர்கள் கிடைத்து உள்ளன.கடந்த நிதியாண்டில், இதே காலத்தில், டி.ஐ.பி.பி., 2.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|