வங்கி பங்குகளில், பரஸ்பர நிதி நிறுவனமுதலீடு ரூ.55,398 கோடியாக சரிவுவங்கி பங்குகளில், பரஸ்பர நிதி நிறுவனமுதலீடு ரூ.55,398 கோடியாக சரிவு ... முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 33.60 கோடி டன் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 33.60 கோடி டன் ...
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ரூ.49,800 கோடியாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2014
03:56

புதுடில்லி :நடப்பு, 2014–15ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 17.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 49,800 கோடி ரூபாயாக (830 கோடி டாலர்) அதிகரித்துள்ளது.குறிப்பாக, செப்டம்பர் மாதத்தில், இதன் ஏற்றுமதி 16 சதவீதம் அதிகரித்து, 7,800 கோடி ரூபாயாக (130 கோடி டாலர்) வளர்ச்சி கண்டுள்ளது.சீனாவில் தொழிலாளர்களுக்கான செலவினம் அதிகரித்து வருவது, வங்க தேச தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை சர்வதேச விதிமுறைகளை பின்பற்றாதது, ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்டவை, இந்திய ஆடைகள் ஏற்றுமதிக்கு சாதகமாக அமைந்துள்ளது என, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஏ.இ.பி.சி.,) தலைவர் வீரேந்தர் உப்பல் தெரிவித்தார்.உலகளவில், ஆடைகள் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள சீனா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளை காட்டிலும், குறைந்த விலை, சிறந்த தரம், குறித்த நேரத்தில் வினியோகம் போன்றவற்றை இந்திய ஏற்றுமதியாளர்கள் அளிப்பதால், சர்வதேச அளவில் இந்திய ஆடைகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.இந்நிலையில், மத்திய அரசிடமிருந்து, ஆதரவான கொள்கை திட்டங்கள் கிடைக்கப் பெற்றால், ஆடைகள் ஏற்றுமதி வர்த்தக விறுவிறுப்பிற்கு மேலும் உதவிகரமாக அமையும் என, உப்பல் தெரிவித்தார்.ஆடைகள் ஏற்றுமதி துறை சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும் அமெரிக்க சந்தையில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது என, ஏ.இ.பி.சி., பொது செயலர் புனித் குமார் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)