பதிவு செய்த நாள்
09 நவ2014
03:57
புதுடில்லி: முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, நடப்பு 2014–15ம் நிதியாண்டின், ஏப்ரல் – அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், 4.64 சதவீதம் அதிகரித்து, 33.60 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 32.11 கோடி டன்னாக இருந்தது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பின், தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமராஜர் துறைமுகம்:உள்நாட்டில், 13 முக்கிய துறைமுகங்கள் உள்ளன. இவற்றில், 11 துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக, மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கு, அதிகபட்சமாக, 20.46 சதவீதம் வளர்ச்சி கண்டு, 63.59 லட்சம் டன்னிலிருந்து, 76.60 லட்சம் டன்னாக எகிறியுள்ளது.இதையடுத்து, சென்னையில் உள்ள காமராஜர் (எண்ணுார்) துறைமுகம் கையாண்ட சரக்கு, 16.08 சதவீதம் உயர்ந்து, 1.48 கோடி டன்னிலிருந்து, 1.72 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.வ.உ.சி., துறைமுகம் கையாண்ட சரக்கு, மதிப்பீட்டு ஏழு மாத காலத்தில், 9.75 சதவீதம் அதிகரித்து, 1.67 கோடி டன்னிலிருந்து, 1.83 கோடி டன்னாகவும், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 2.84 சதவீதம் உயர்ந்து, 3.03 கோடி டன்னிலிருந்து, 3.12 கோடி டன்னாகவும் வளர்ச்சி கண்டுள்ளன.கோல்கட்டாவில், இரண்டு துறைமுகங்கள் உள்ளன. இதில், கோல்கட்டா டாக் சிஸ்டம்ஸ் கையாண்ட சரக்கு, 8.65 சதவீதம் உயர்ந்து, 72.05 லட்சம் டன்னிலிருந்து, 78.28 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.மங்களூர்அதேசமயம், ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் கையாண்ட சரக்கு, 2.48 சதவீதம் சரிவடைந்து, 1.69 கோடி டன்னிலிருந்து, 1.65 கோடி டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.இதேபோன்று, நியூ மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவும், 3.64 சதவீதம் சரிவடைந்து, 2.22 கோடி டன்னிலிருந்து, 2.14 கோடி டன்னாக குறைந்துள்ளது.அதேசமயம், மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கு, 6.98 சதவீதம் உயர்ந்து, 3.30 கோடி டன்னிலிருந்து, 3.53 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் கையாண்ட சரக்கின் அளவு, 5.31 சதவீதம் உயர்ந்து, 3.56 கோடி டன்னிலிருந்து, 3.75 கோடி டன்னாகவும், கண்ட்லா துறைமுகம் சரக்கின் அளவு, 2.31 சதவீதம் அதிகரித்து, 5.35 கோடி டன்னிலிருந்து, 5.47 கோடி டன்னாகவும் வளர்ச்சி கண்டுள்ளன.விசாகப்பட்டினம்மேற்கண்டவை தவிர, கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கு, 1.61 சதவீதம் உயர்ந்து, 1.26 கோடி டன்னிலிருந்து, 1.28 கோடி டன்னாகவும், பாரதீப் துறைமுகம் சரக்கின் அளவு, 6.89 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.87 கோடி டன்னிலிருந்து, 4.14 கோடி டன்னாகவும் அதிகரித்துள்ளன.இதேபோன்று, விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்கும், 3.16 சதவீதம் உயர்ந்து, 3.32 கோடி டன்னிலிருந்து, 3.43 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது என, புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|