ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ரூ.49,800 கோடியாக வளர்ச்சிஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ரூ.49,800 கோடியாக வளர்ச்சி ... தாவர எண்ணெய் இறக்­கு­மதி:1.23 கோடி டன்னை எட்டும் தாவர எண்ணெய் இறக்­கு­மதி:1.23 கோடி டன்னை எட்டும் ...
முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 33.60 கோடி டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2014
03:57

புதுடில்லி: முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, நடப்பு 2014–15ம் நிதியாண்டின், ஏப்ரல் – அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், 4.64 சதவீதம் அதிகரித்து, 33.60 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 32.11 கோடி டன்னாக இருந்தது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பின், தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமராஜர் துறைமுகம்:உள்நாட்டில், 13 முக்கிய துறைமுகங்கள் உள்ளன. இவற்றில், 11 துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக, மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கு, அதிகபட்சமாக, 20.46 சதவீதம் வளர்ச்சி கண்டு, 63.59 லட்சம் டன்னிலிருந்து, 76.60 லட்சம் டன்னாக எகிறியுள்ளது.இதையடுத்து, சென்னையில் உள்ள காமராஜர் (எண்ணுார்) துறைமுகம் கையாண்ட சரக்கு, 16.08 சதவீதம் உயர்ந்து, 1.48 கோடி டன்னிலிருந்து, 1.72 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.வ.உ.சி., துறைமுகம் கையாண்ட சரக்கு, மதிப்பீட்டு ஏழு மாத காலத்தில், 9.75 சதவீதம் அதிகரித்து, 1.67 கோடி டன்னிலிருந்து, 1.83 கோடி டன்னாகவும், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 2.84 சதவீதம் உயர்ந்து, 3.03 கோடி டன்னிலிருந்து, 3.12 கோடி டன்னாகவும் வளர்ச்சி கண்டுள்ளன.கோல்கட்டாவில், இரண்டு துறைமுகங்கள் உள்ளன. இதில், கோல்கட்டா டாக் சிஸ்டம்ஸ் கையாண்ட சரக்கு, 8.65 சதவீதம் உயர்ந்து, 72.05 லட்சம் டன்னிலிருந்து, 78.28 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.மங்களூர்அதேசமயம், ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் கையாண்ட சரக்கு, 2.48 சதவீதம் சரிவடைந்து, 1.69 கோடி டன்னிலிருந்து, 1.65 கோடி டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.இதேபோன்று, நியூ மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவும், 3.64 சதவீதம் சரிவடைந்து, 2.22 கோடி டன்னிலிருந்து, 2.14 கோடி டன்னாக குறைந்துள்ளது.அதேசமயம், மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கு, 6.98 சதவீதம் உயர்ந்து, 3.30 கோடி டன்னிலிருந்து, 3.53 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் கையாண்ட சரக்கின் அளவு, 5.31 சதவீதம் உயர்ந்து, 3.56 கோடி டன்னிலிருந்து, 3.75 கோடி டன்னாகவும், கண்ட்லா துறைமுகம் சரக்கின் அளவு, 2.31 சதவீதம் அதிகரித்து, 5.35 கோடி டன்னிலிருந்து, 5.47 கோடி டன்னாகவும் வளர்ச்சி கண்டுள்ளன.விசாகப்பட்டினம்மேற்கண்டவை தவிர, கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கு, 1.61 சதவீதம் உயர்ந்து, 1.26 கோடி டன்னிலிருந்து, 1.28 கோடி டன்னாகவும், பாரதீப் துறைமுகம் சரக்கின் அளவு, 6.89 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.87 கோடி டன்னிலிருந்து, 4.14 கோடி டன்னாகவும் அதிகரித்துள்ளன.இதேபோன்று, விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்கும், 3.16 சதவீதம் உயர்ந்து, 3.32 கோடி டன்னிலிருந்து, 3.43 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது என, புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)