பதிவு செய்த நாள்
10 நவ2014
05:14
புதுடில்லி:நடப்பு 2014–15ம் பருவத்தில் (நவ.,–அக்.,), இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி, 1.23 கோடி டன் என்ற புதிய சாதனை அளவை எட்டும் என, கோத்ரெஜ் இண்டர்நேஷனல் நிறுவன இயக்குனர் துரப் மிஸ்திரி தெரிவித்தார்.கடந்த அக்டோபருடன் முடிவடைந்த 2013–14ம் பருவத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி, 1.16 கோடி டன் என்ற அளவில் உள்ளது.இந்நிலையில், உள்நாட்டில், தாவர எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சுணக்கம், வெளிநாடுகளிலிருந்து இதன் இறக்குமதியை அதிகரிக்க காரணமாக அமையும்.இந்தியாவின் தாவர எண்ணெய் தேவை, ஆண்டுக்கு 1.70 – 1.80 கோடி டன்னாக உள்ளது. இதில், 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.
ஒட்டு மொத்த இறக்குமதியில், பாமாயிலின் பங்களிப்பு மட்டும், 71 சதவீத அளவிற்கு உள்ளது.சென்ற பருவத்தில், 77.10 லட்சம் டன்னாக இருந்த பாமாயில் இறக்குமதி, நடப்பு பருவத்தில், 87.50 லட்சம் டன்னாக எகிறும்.இதேபோன்று, சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியும், 13 லட்சம் டன்னிலிருந்து, 18 லட்சம் டன்னாக உயர வாய்ப்புள்ளது என, மிஸ்திரி மேலும் தெரிவித்தார்.நம்நாடு, இந்தோனேஷியா மற்றும் மலேசியாவிலிருந்து பாமாயிலையும், உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து சூரியகாந்தி எண்ணெயையும் அதிகளவில் இறக்குமதி செய்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|