பதிவு செய்த நாள்
10 நவ2014
05:15
புதுடில்லி:கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பு ரபி பருவத்தில், எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பு, சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.அதேசமயம், கோதுமை பயிரிடும் பரப்பு இன்னும் விறுவிறுப்படையவில்லை என, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.கடந்த, 2013–14ம் ரபி பருவத்தில், எண்ணெய் வித்துக்கள், 28.41 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்தன. இந்நிலையில், 2014–15ம் நடப்பு ரபி பருவத்தில் இதுவரையில், எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பு, 31.36 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது.அதேசமயம், கடந்தாண்டில், 9.39 லட்சம் ஹெக்டேரில் கோதுமை பயிரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது, 4.47 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே கோதுமைபயிரிடப்பட்டுள்ளது.
கோதுமை உள்ளிட்ட இதர பயிர்களின் விதைப்பு பணிகள், வரும் வாரங்களில் விறுவிறுப்படையும். பருவமழை தாமதம் காரணமாக, விதைப்பு பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தால், கரீப் பருவ நெல் அறுவடை பணிகள் நிறைவடையாமல், தொடர்ந்து நடைபெற்று வருவதாக, வேளாண் ஆணையர் ஜே.எஸ்.சாந்து தெரிவித்தார்.பொதுவாக, ரபி பருவ விதைப்பு பணிகள், அக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு, மார்ச் – ஏப்ரலில் அறுவடை செய்யப்படும்.புள்ளிவிவர மதிப்பீட்டின் படி, நடப்பாண்டில், பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பு, 23.98 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
இது, கடந்தாண்டில், 30.86 லட்சம் ஹெக்டேராக உயர்ந்திருந்தது.கரீப் பருவத்தில் ஏற்பட்ட பருவமழை தாமதத்தால், பயிரிடாமல் விடப்பட்ட, 33.70 லட்சம் ஹெக்டேரை, ரபி பருவத்தில், நேர்த்தியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, மாநில அரசுகளை, மத்திய அரசு கேட்டு கொண்டது.இதன் காரணமாகவே, எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பு, சிறப்பான அளவில் உயர்ந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|