பதிவு செய்த நாள்
04 டிச2014
10:20
மும்பை : பங்குசந்தைகள், கடந்த இருதினங்களாக மந்தமாக இருந்து வந்த நிலையில் இன்று(டிச., 4ம் தேதி) நல்ல ஏற்றம் கண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான குறியீட்டு எண் சென்செக்ஸ் 278.41 புள்ளிகள் உயர்ந்து 28,721.12-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 89.30 புள்ளிகள் உயர்ந்து 8,626.95-ஆகவும் இருந்தன. முன்னதாக நிப்டி 8,626.95 ஆக இருந்ததே புதிய உச்சமாக இருந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு புதிய உச்சத்தை நிப்டி எட்டியுள்ளது. சில்லரை விற்பனையில், சிகரெட் விற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு வாபஸ் பெற்றதன் எதிரொலியாக ஐடிசி., உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றத்துடன் காணப்பட்டன. மேலும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும் பங்குசந்தைகள் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|