பதிவு செய்த நாள்
05 டிச2014
01:14
சென்னை:‘தங்கத்திற்கான சேதாரம் ஒரே அளவில் இருக்க, இந்திய தர நிர்ணய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, இந்திய நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.தமிழ்நாடு நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர், பிரபாகரன் கூறியதாவது:சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை குறைவால், பெட்ரோல், டீசல் விலை குறைந்துஉள்ளது. அதுபோன்று, நுகர்வோருக்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையையும், கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
தங்கத்திற்கு செய் கூலி, சேதாரம் என, நுகர்வோரிடம், நகை நிறுவனங்கள் இஷ்டம்போல் வசூலித்து வருகின்றன. நாடு முழுவதும், ‘ஹால்மார்க்’ தங்கத்திற்காவது, சேதாரம் ஒரே அளவில் இருக்க, இந்திய தர நிர்ணயம் ஆணையம், மூலம், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|