தொடர்ந்து 5 மாதங்களாகசில்லரை பணவீக்கம் சரிவுதொடர்ந்து 5 மாதங்களாகசில்லரை பணவீக்கம் சரிவு ... வெளிமாநில வரத்தால்அரிசி விலை வீழ்ச்சி வெளிமாநில வரத்தால்அரிசி விலை வீழ்ச்சி ...
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால்அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி மிச்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2014
00:31

புதுடில்லி:கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால், மத்திய அரசுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, நிதியமைச்சர் அருண்ஜெட்லி சமர்ப்பிக்க உள்ள, 2015–16ம் நிதியாண்டு பட்ஜெட்டில், குறிப்பிடத்தக்க அளவு, நிதிச் செலவின ஒதுக்கீட்டை குறைக்க உதவும்.கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 40 சதவீதம் குறைந்து, 60 டாலர் என்ற அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
இறக்குமதி:இந்தியா, நாள் ஒன்றுக்கு, 40 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதற்காக, நடப்பு 2014–15ம் நிதியாண்டில், 5.44 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் விலை, வரும் நிதியாண்டிலும் இதே நிலையில் நீடிக்கும்பட்சத்தில், இதன் இறக்குமதி செலவு, 1.11 லட்சம் கோடி ரூபாய் குறையும். இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 0.9 சதவீதமாகும்.
கச்சா எண்ணெய் விலை இறங்கியுள்ள நிலையில், மத்திய அரசு, கடந்த மாதம் டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரியை இரு முறை உயர்த்தியது.இதனால், மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் 9,900 கோடி ரூபாயும், வரும் நிதியாண்டில், 30,935 கோடி ரூபாயும் கிடைக்கும் என, மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.கச்சா எண்ணெய் மீதான 5 சதவீத இறக்குமதி வரி, கடந்த 2011ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், 24,748 கோடி ரூபாய், அரசுக்கு கிடைக்கும்.இந்த வகையில், மொத்தத்தில், மத்திய அரசுக்கு, 99,610 கோடி ரூபாய் நிதி கிடைக்கும் என, அந்த அதிகாரி மேலும் கூறினார்.
சேமிப்பு:ஆக, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்க உள்ள வரி உள்ளிட்டவற்றின் மூலம், மத்திய அரசுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சேமிப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டுபிடிப்பு:lஓ.என்.ஜி.சி., நிறுவனம், கிருஷ்ணா – கோதாவரி படுகை மற்றும் மும்பை கடற்பகுதியில், மூன்று இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் உள்ளதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.lஇந்நிறுவனம், பங்குதாரர்களுக்கு, 5 ரூபாய் முக மதிப்புள்ள பங்கு ஒன்றுக்கு, 100 சதவீதம், அதாவது 5 ரூபாய், இடைக்கால டிவிடெண்டு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.lஇந்த வகையில், மத்திய அரசுக்கு, இடைக்கால டிவிடெண்டு தொகையாக, ரூ.2,948 கோடி கிடைக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)