பதிவு செய்த நாள்
20 ஜன2015
03:30
திண்டுக்கல்:ஆந்திராவில் விளைச்சல் அதிகரித்து உள்ளதால் தமிழகத்தில் கொப்பரை தேங்காய் விலை கிலோவிற்கு ரூ.40 வரை சரிந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், வத்தலக்குண்டு, பழநி, ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன. இங்கு விளையும் தேங்காய்கள் மும்பை, புதுடில்லி, கொல்கத்தா, ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. பெரிய காய்கள் உணவு பயன்பாட்டிற்கும், சிறிய காய்கள் கொப்பரை தேங்காய்களாகவும் அனுப்பப்படுகின்றன. இங்கு கடந்த 2 ஆண்டுகள் நிலவிய வறட்சியால் தேங்காய் அளவு சிறுத்துள்ளது.அதேசமயம் ஆந்திராவில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் வடமாநில வியாபாரிகள் ஆந்திராவில் அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர்.எனவே, திண்டுக்கல்லில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களின் விலை சரிந்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன் ரூ.9 முதல் ரூ.12 வரை விற்பனையான ஒரு தேங்காய் ரூ.6 ஆக குறைந்துள்ளது. அதேபோல் ரூ.110 க்கு விற்பனையான ஒரு கிலோ கொப்பரை தேங்காய் ரூ.72 ஆக குறைந்துள்ளது.அஞ்சுகுழிப்பட்டி விவசாயி ஜான்சன் கூறுகையில், “ஆந்திரா காய்களை வியாபாரிகள் விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தேங்காய்களின் விலை சரிந்துள்ளது. விற்பனை ஆகாத கொப்பரை தேங்காய்களில் இருந்து எண்ணெய் பிழிந்து விற்பனை செய்கிறோம்,” என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|