பதிவு செய்த நாள்
22 ஜன2015
16:57
மும்பை : கடந்த சில நாட்களாக இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உச்சம் பெற்று வந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 29 ஆயிரம் புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்தது. நிப்டியும் புதிய உச்சத்தை தொட்டன.
கடந்தவாரம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி வகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்தது.மேலும் நடப்பாண்டுக்கான 3வது காலாண்டு நிதி நிலை அறிக்கையை ஒவ்வொரு நிறுவனங்களும் வௌியிட்டு வருகின்றன. இதன்காரணமாக அந்த துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்க தொடங்கினர். மேலும் அந்நிய முதலீடுகளும் அதிகரித்து வருவதால் இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 117.16 புள்ளிகள் உயர்ந்து 29,006.02–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 31.90 புள்ளிகள் உயர்ந்து 8,761.40–ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சன் பார்மா, ஆக்சிஸ், டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி., சிப்லா, டாடா ஸ்டீல், இன்போசிஸ், கோல் இந்தியா, விப்ரோ, டாக்டர் ரெட்டி, ஸ்டெர்லைட், பெல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹிண்டால்கோ, பார்தி ஏர்டெல், உள்ளிட்ட அநேக நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|