தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ... உருளை விளைச்சல் உச்சம்:வர­லாறு காணாத விலை சரிவு உருளை விளைச்சல் உச்சம்:வர­லாறு காணாத விலை சரிவு ...
துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.145: வர­லாறு காணாத விலை உயர்வு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2015
06:52

வரத்து குறை­வாலும், பதுக்கல் கார­ண­மா­கவும், தமி­ழ­கத்தில், துவரம் பருப்பு விலை 1 கிலோ, 145 ரூபாய் வரை உயர்ந்­துள்­ளது, மக்­களை அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்­ளது. ஒரு வாரத்தில், மூட்­டைக்கு, 2,000 ரூபாய் வரை உயர்ந்­துள்­ளது.தமி­ழ­கத்தில், பருப்பு உற்­பத்தி ஓர­ளவு இருந்­தாலும், தேவைக்கு ஏற்ற அளவில் இல்­லா­ததால், குஜராத், மத்­திய பிர­தேசம், மகா­ராஷ்­டிரா, கர்­நா­டகா மற்றும் ஆந்­திர மாநி­லங்­களை நம்ப வேண்­டி­யுள்­ளது. கென்யா, தான்­சா­னியா, பர்மா போன்ற வெளி­நா­டு­களில் இருந்தும் இறக்­கு­ம­தி­யா­கி­றது.வெளி மாநி­லங்­களில், அறு­வடை நேரத்தில் பெய்த மழையால், உற்­பத்தி பாதிக்­கப்­பட்டு, தமி­ழ­கத்­திற்கு வரத்து குறைந்­துள்­ளதால், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை வெகு­வாக உயர்ந்­துள்­ளது.*கடந்த வாரம், 100 கிலோ முதல் ரகம், 10,900 ரூபாய், இரண்டாம் ரகம், 9,800 ரூபா­யாக இருந்த துவரம் பருப்பு விலை, நேற்று, முதல் ரகம், 12,900 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 11,900 ரூபாய்க்கும் விற்­கப்­ப­டு­கி­றது.சில்­ல­ரையில், முதல் ரகம் 1 கிலோ, 115 ரூபாயில் இருந்து, 135 ரூபா­யா­கவும், இரண்டாம் ரகம், 105 ரூபாயில் இருந்து, 125 ரூபா­யா­கவும், பாக்கெட் பருப்பு விலை, 125 ரூபாயில் இருந்து, 145 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கி­றது.
*கடந்த வாரம், 100 கிலோ முதல் ரகம், 10,500 ரூபாய்; இரண்டாம் ரகம், 9,500 ரூபாய்க்கும் விற்ற உளுந்தம் பருப்பு, நேற்று, மூட்­டைக்கு, 800 ரூபாய் உயர்ந்து, முதல் ரகம், 11,300 ரூபாய், இரண்டாம் ரகம், 10,300 ரூபாய்க்கும் விற்­கி­றது.சில்­ல­ரையில் 1 கிலோ, முதல் ரகம், 110 ரூபாயில் இருந்து, 120 ரூபா­யா­கவும், இரண்டாம் ரகம், 100 ரூபாயில் இருந்து, 110 ரூபாய், பாக்கெட் பருப்பு, 120 ரூபாய்க்கும் விற்­கப்­ப­டு­கி­றது.இது­கு­றித்து, தமிழ்­நாடு மளிகை வியா­பா­ரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறி­ய­தா­வது:தமி­ழ­கத்தில், 1 கிலோ துவரம் பருப்பு, 135, 145 ரூபாய் என்­பது வர­லாறு காணாத விலை. மகா­ராஷ்­டிரா, குஜராத், மத்­திய பிர­தேசம் போன்ற மாநி­லங்­களில் அறு­வ­டையின் போது, மழை பெய்­ததால், உற்­பத்தி குறைந்து, தமி­ழ­கத்­திற்கு வரத்து குறைந்­துள்­ளது. அமெ­ரிக்க டாலர் மதிப்பில் நிலை­யற்ற தன்­மையால், வெளி­நா­டு­களில் இருந்தும் இறக்­கு­மதி குறைந்­துள்­ளது. ‘ஆன்–லைன்’ வர்த்­தகம் விலை உயர்வும் ஒரு காரணம். விலை உயர்வை கருத்தில் கொண்டு, பெரும் நிறு­வ­னங்கள் மொத்­த­மாக வாங்கி பதுக்கி வைத்து, பெரும் தட்­டுப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதால் விலை அதிகம் உயர்ந்­துள்­ளது. பதுக்கல், ‘ஆன்–லைன்’ வர்த்­த­கத்தை தடுக்­கா­விட்டால், 1 கிலோ, 150 ரூபாய் வரை உயர்ந்­தாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை.இவ்­வாறு, அவர் கூறினார்.
இந்­திய நுகர்வோர் சங்க தொடர்பு அலு­வலர் சோம­சுந்­தரம் கூறு­கையில்,‘‘பருப்பு தட்­டுப்­பாடைக் கருத்தில் கொண்டு, வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­மதி செய்ய சாத­க­மான சூழலை மத்­திய அரசு ஏற்­ப­டுத்த வேண்டும். அத்­தி­யா­வ­சிய பொருட்கள் சட்­டத்தின் கீழ், பதுக்­க­லையும் தடுத்தால் தான் சிக்கல் தீரும்,’’ என்றார்.– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)