பதிவு செய்த நாள்
14 ஆக2015
06:52
வரத்து குறைவாலும், பதுக்கல் காரணமாகவும், தமிழகத்தில், துவரம் பருப்பு விலை 1 கிலோ, 145 ரூபாய் வரை உயர்ந்துள்ளது, மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு வாரத்தில், மூட்டைக்கு, 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.தமிழகத்தில், பருப்பு உற்பத்தி ஓரளவு இருந்தாலும், தேவைக்கு ஏற்ற அளவில் இல்லாததால், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களை நம்ப வேண்டியுள்ளது. கென்யா, தான்சானியா, பர்மா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதியாகிறது.வெளி மாநிலங்களில், அறுவடை நேரத்தில் பெய்த மழையால், உற்பத்தி பாதிக்கப்பட்டு, தமிழகத்திற்கு வரத்து குறைந்துள்ளதால், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை வெகுவாக உயர்ந்துள்ளது.*கடந்த வாரம், 100 கிலோ முதல் ரகம், 10,900 ரூபாய், இரண்டாம் ரகம், 9,800 ரூபாயாக இருந்த துவரம் பருப்பு விலை, நேற்று, முதல் ரகம், 12,900 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 11,900 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.சில்லரையில், முதல் ரகம் 1 கிலோ, 115 ரூபாயில் இருந்து, 135 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 105 ரூபாயில் இருந்து, 125 ரூபாயாகவும், பாக்கெட் பருப்பு விலை, 125 ரூபாயில் இருந்து, 145 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
*கடந்த வாரம், 100 கிலோ முதல் ரகம், 10,500 ரூபாய்; இரண்டாம் ரகம், 9,500 ரூபாய்க்கும் விற்ற உளுந்தம் பருப்பு, நேற்று, மூட்டைக்கு, 800 ரூபாய் உயர்ந்து, முதல் ரகம், 11,300 ரூபாய், இரண்டாம் ரகம், 10,300 ரூபாய்க்கும் விற்கிறது.சில்லரையில் 1 கிலோ, முதல் ரகம், 110 ரூபாயில் இருந்து, 120 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 100 ரூபாயில் இருந்து, 110 ரூபாய், பாக்கெட் பருப்பு, 120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறியதாவது:தமிழகத்தில், 1 கிலோ துவரம் பருப்பு, 135, 145 ரூபாய் என்பது வரலாறு காணாத விலை. மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் அறுவடையின் போது, மழை பெய்ததால், உற்பத்தி குறைந்து, தமிழகத்திற்கு வரத்து குறைந்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பில் நிலையற்ற தன்மையால், வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி குறைந்துள்ளது. ‘ஆன்–லைன்’ வர்த்தகம் விலை உயர்வும் ஒரு காரணம். விலை உயர்வை கருத்தில் கொண்டு, பெரும் நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதால் விலை அதிகம் உயர்ந்துள்ளது. பதுக்கல், ‘ஆன்–லைன்’ வர்த்தகத்தை தடுக்காவிட்டால், 1 கிலோ, 150 ரூபாய் வரை உயர்ந்தாலும் ஆச்சரியமில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்திய நுகர்வோர் சங்க தொடர்பு அலுவலர் சோமசுந்தரம் கூறுகையில்,‘‘பருப்பு தட்டுப்பாடைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய சாதகமான சூழலை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ், பதுக்கலையும் தடுத்தால் தான் சிக்கல் தீரும்,’’ என்றார்.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|