பதிவு செய்த நாள்
14 ஆக2015
06:53
இந்தியாவின் பல மாநிலங்களில், 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, உருளைக் கிழங்கு அமோகமாக விளைந்துள்ளது.தமிழகம் உட்பட நாடு முழுவதும், 23 மாநிலங்களில், ஆண்டுதோறும், 41 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப், கர்நாடகா, அசாம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்தில், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில், உ.பி.,யில், 33 சதவீதம்; மேற்கு வங்கத்தில், 22 சதவீதம்; பீகாரில், 16 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகத்தான் உற்பத்தி ஆகிறது.மற்ற மாநிலங்களில், குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே, உருளைக் கிழங்கு பயிரிடப்படுகிறது. தமிழகத்தில், ஆண்டு முழுவதுமே உற்பத்தி செய்கின்றனர்.இப்போது, பல மாநிலங்களில், உருளைக்கிழங்கு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதன் விலையும் சரிந்துள்ளது.
இதுகுறித்து, சென்னையை சேர்ந்த உருளைக்கிழங்கு மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 10 ஆண்டுகளாக, ஒரு கிலோ உருளைக்கிழங்கு, சராசரியாக 28 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சில மாதங்களில் மட்டும், 40 ரூபாய் வரை உயரும்.ஆனால், இப்போது மொத்த விலையில், ஒரு கிலோ உருளைக்கிழங்கு, 10 முதல் 12 ரூபாய் வரையிலும், சில்லறை விலையில், ஒரு கிலோ 18 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. சென்னைக்கு மட்டும் தினமும், 60 லாரிகளில் உருளைக்கிழங்கு வருகிறது.விலை குறைந்துள்ளதால், பொதுமக்கள் மட்டுமின்றி, ஓட்டல் நடத்துவோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|