பதிவு செய்த நாள்
14 ஆக2015
10:20
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்து இருக்கிறது. நேற்று முதல் மீண்டும் ரூ.65–ல் வர்த்தகமாகி கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பு இன்று(ஆகஸ்ட 14ம் தேதி) மேலும் சரிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகள் சரிந்து ரூ.65.34–ஆக இருந்தது. உலகளவில் டாலரின் மதிப்பு பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு சரிந்ததாலும், வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அதிகளவில் டாலரின் தேவை இருப்பதாலும், சீனாவின் யுவான் தொடர்ந்து சரிந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு தொடர்வதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றத்தால் ரூபாயின் மதிப்பு சற்று மீண்டுள்ளது. காலை 10.15 மணியளவில் ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.65.15–ஆக இருந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.65.10 ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|